பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
காலி ஹபராதுவ – பம்பகல பாலத்துக்கு அருகில் கழுகு ஒன்றை உயிருடன் சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபர்கள் 6 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் காலி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சந்தேகநபர்கள் வந்சாவல மற்றும் கந்துருதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் முன்னதாக, இருவர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படியே…
தேங்காய் எண்ணையுடன் “பாம்” எண்ணையைக் கலந்து விற்பனை செய்த குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்ட எண்ணெய் வியாபாரிக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி 5 ஆயிரம் ரூபாவினை அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளார். பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சம்பிக்க ராஜபக்ச முன்னிலையில் நேற்று மேற்படி வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பதுளை மாநகரில் எம். சத்தியசீலன் என்ற எண்ணை வியாபாரிக்கே, மேற்படி தண்டனை வழங்கப்பட்டதாகும். நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்தே, குறிப்பிட்ட நபருக்கெதிராக, பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில்…
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தினேஷ் குணவர்தன எம்.பி, இன்றிலிருந்து பதின்நான்கு நாட்களுக் குள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும் அவ்வாறு அறிவிக்காத பட்சத்தில் அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது தேர்தல் திகதி தொடர்பில் கேள்வி எழுப்புவோம். கடந்த ஜனவரி எட்டாம் திகதி…
கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபடச் சென்ற தொழிலாளி , சேனை வாடியொன்றிலிருந்து, சடலமாக புத்தல பொலிஸாரினால் நேற்று மீட்கப்பட்டுள்ளார். பசறைப் பகுதியின் கமேவலை தோட்டத்திலிருந்து, கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபடச்சென்ற எஸ்.சண்முகம் என்ற 46 வயது நிரம்பிய தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது சடலம், வைத்திய பரிசோதனைக்காக, புத்தல அரசினர் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இம் மரணம் இயற்கை மரணமா? அல்லது கொலையா? என்பது குறித்து, தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மைத்திரி -மஹிந்த ஒருபோதும் இணையப்போவதில்லை. இருவரதும் கொள்கைகளுக்கிடையில் பாரிய வித்தியாசம் நிலவுகின்றது என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
பகல் வேளை உணவின் பின்னர் பால் தேநீர் தயாரிக்க முயன்ற 11 வயதுச் சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக பலியாகியுள்ளான். இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை தங்கொட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தங்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் – 6 இல் கல்வி கற்கும் தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த மல்லிக ஆராச்சிகே செனால் தேசான பெரேரா என்ற சிறுவனே மின்சாரம் தாக்கி பலியானவனாவான்.
அரசன் அரசனைப் போல் உணவருந்த வேண்டும். ஜனாதிபதி தன் சிறப்புரிமைகளை அனுபவிக்க வேண்டும். அதைவிடுத்து கிராம சேவகரைப் போல் செயல்படக்கூடாது என என்னை விமர்சித்துள்ளார். ஆனால், நான் இதற்கு தயாரில்லை. அனைவருக்கும் சம அந்தஸ்து என்ற பௌத்த தர்மத்தை கடைப்பிடிப்பவன் நான் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தொடர் உஷ்ணத்திற்கு இன்று முதல் முற்றுப்புள்ளியாக இலங்கையில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தொட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப் பெண்களாக சென்ற 72 பேர் மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மத்தியக் கிழக்கு நாடுகளில் பல துன்பங்களை அனுபவித்து வந்ததை தொடர்ந்தே அவர்கள் அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பநிலை காரணமாக மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளதுடன் குடிநீர் பிரச்சினையையும் எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பிரதேசங்களில் நிலவிவரும் கடும் வரட்சியால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, மலையகத் தின் நீர்த்தேக்கங்கள் பலவற்றில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது. கொத்மலை நீர்த்தேக்கத்தில் 25 சதவீதம் வரை நீர்மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளது டன், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இலங்கை மகாவலி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. காசல்றீ, மவுசாகலை மற்றும்…
கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அங்கம் வகித்தார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்து தற்போதைய அரசாங்கம் குற்றம் சுமத்தி வருகின்றது எனவும் அந்த அனைத்து குற்றங்களையும் மஹிந்த ராஜபக்ஸ தனித்து செய்யவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; கடந்த கால அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அப்போதைய அமைச்சரவையில் அங்கம் வகித்த மைத்திரிபால சிறிசேனவும்அதற்கான பொறுப்பினை…