Headlines

நிந்தவூரில் மக்கள் காங்கிரஸின் மற்றுமொரு பரிமாணம் – மகளிர் அணி உருவாக்கம்!

-முர்ஷிட் முஹம்மத்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை தலைமையிலான நாடளாவிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக, மகளிருக்கான கூட்டமும், நிந்தவூர் பிரதேச மகளிர் அணித் தலைவிக்கான நியமனம் வழங்கும் நிகழ்வும், நிந்தவூரின் மக்கள் காங்கிரஸின் மக்கள் பணிமனையான அமைச்சர் முஸ்தபா லேண்டில் நேற்று (30) இடம்பெற்றது. இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை, மக்கள் காங்கிரஸின் தேசிய…

Read More

மு.கா வின் ஆரம்பகாலப் போராளி மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகாலப் போராளியும், முன்னாள் நகரசபை வேட்பாளருமான ஏ.ஜி.எம்.ஜபருள்ளாஹ் (நாசர்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். மக்கள் காங்கிரஸுடன் இணைந்துகொண்ட அவர் கூறியதாவது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் சுமார் 25 வருடங்கள் இணைந்து செயற்பட்டுள்ளேன். மு.கா தலைவரினால் மக்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் நீரில் எழுதப்படும் பொய்யான வாக்குறுதிகளாகவே இருக்கின்றது. எனவே, தொடர்ந்தும் எம்மால் மக்களை ஏமாற்றி, எமது ஆதரவாளர்களின் வாக்குகளை மு.காவுக்கு வழங்கத் தயார் இல்லை என்றும் கூறினார்….

Read More

‘அமைச்சர் ரிஷாட்டினால் முன்னெடுக்கப்படும் வாழ்வாதார திட்டங்களை முறியடிக்க சதி’ அக்கரைப்பற்றில் டாக்டர் ஹஸ்மியா!

–ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் முன்னெடுக்கப்படும் வாழ்வாதாரத் திட்டங்களை முறியடிக்க பல்வேறு வழிகளில் சதித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன என்று மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மற்றும் ஒலுவில் பிரதேசங்களில்  கடந்த வியாழக்கிழமை (28) மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. அந்தவகையில், குடியிருப்பு பிரதேச சபையின் மக்கள் காங்கிரஸ் கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாகக்…

Read More

மக்கள் காங்கிரஸின் மடவளை காரியாலயம் திறப்பு நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முஸ்லிம் சமூகத்தின் இன்றைய குரலுமான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இயங்கும் “அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்” எதிர்வரும் 2018 ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் தனது மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிட களமிறங்கியுள்ளதை யாவரும் அறிவர். இந்நிலையில் கண்டி மாவட்டத்தின் மடவளை மடிகே, குன்னேபான மடிகே, பிஹில்ல தெனிய ஆகிய பகுதிகளில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரான அரசியல் அனுபவசாலியும், சமூக சேவகருமான…

Read More

கண்டி மாவட்ட மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குகின்றது. அதனடிப்படையில் கண்டி மாவட்டத்தின் அக்குரணை மற்றும் மடவளை ஆகிய பிரதேசங்களில் நேற்று (30) மக்கள் சந்திப்புக்கள் இடம்பெற்றன. அக்குரணை பிரதேச சபை மற்றும் பாத்ததும்பர பிரதேச சபை தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டங்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் செரீப், மக்கள்…

Read More

மருதமுனை வேட்பாளர்களுடனான சந்திப்பில் பிரதி அமைச்சர் அமீர் அலி!

-ஊடகப்பிரிவு- ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் கீழ் கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் மருதமுனை வேட்பாளர்களுடனான சந்திப்பொன்று இன்று  (30) இடம்பெற்றது. மருதமுனை அல்ஹாஜ் நெய்னா முஹம்மத் (JP) அவர்களின் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்த்துரையாடலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்துகொண்டார். இந்நிகழ்வில் மருதமுனை மத்திய குழுத் தலைவர் கலீல் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்களும்  பங்கேற்றிருந்தனர்.        

Read More

மன்னார் புதிய ஆயருக்கு அமைச்சர் ரிஷாட் வாழ்த்து தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- மன்னார் மாவட்டத்தின் புதிய ஆயராக கலாநிதி, மரியாதைக்குரிய பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்ணாண்டோ அவர்கள் கடமையேற்கும் நிகழ்வு, மன்னார் சென் செபஸ்தியன் ஆலயத்தில் இன்று (30) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன, புதிய ஆயருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.      

Read More

திக்கும்புர லங்கா சதொச அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் சந்திம வீரக்கொடி, அமைச்சர் ரிஷாட்டுக்கு நன்றி தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு-  எனது வேண்டுகோளை உடன் ஏற்று, திக்கும்புர மக்களுக்காக லங்கா சதொச கிளையை அமைத்துத் தந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்று திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். காலி மாவட்டத்தின் திக்கும்புர பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட லங்கா சதொச கிளை அங்குரார்ப்பண நிகழ்வில் (29) பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சந்திம வீரக்கொடி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, எனது தொகுதியான திக்கும்புர…

Read More

செல்வநகர் மக்கள் சந்திப்பில் டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- தோப்பூர், செல்வநகரில் இன்று மாலை (29) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூப் பங்கேற்றார். இங்கு உரையாற்றிய அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்திலே அதிகமான வட்டாரங்களைக் கைப்பற்றும் வாய்ப்பை இறைவன் ஏற்படுத்தித் தருவான். சிறுபான்மை மக்களின் சேவைத் தலைவராக மக்கள் பணியாற்றி வரும் மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்காக துஆ செய்யுங்கள் என்றும்…

Read More

‘கல்முனை மாநகர சபையை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றுவது உறுதி’ சிராஸ் மீராசாஹிப் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றுவது உறுதி என்று முன்னாள் மேயரும், மக்கள் காங்கிரஸின் பிரதி தேசியமைப்பாளரும், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவருமான சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் களம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கையின் பிரதிபலிப்பாக சாய்ந்தமருது பள்ளிவாசல் சம்மேளனம் மேற்கொண்டிருக்கும் முடிவை நான் மதிக்கின்றேன்….

Read More

அம்பதென்ன லங்கா சதொச திறப்பு நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- கண்டி மாவட்டத்தின் அம்பதென்ன பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட லங்கா சதொச கிளை இன்று காலை (29) திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க இடம்பெற்ற இந்நிகழ்வில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.எம் ஹலீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, லங்கா சதொச கிளையை திறந்து வைத்தார். அத்துடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இணைப்பாளரும், லக்ஸல நிறுவனத்தின் பணிப்பாளருமான ரியாஸ் இஸ்ஸதீன்,…

Read More

எலபடகம லங்கா சதொச கிளை அங்குரார்ப்பண நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- குருநாகல், எலபடகமையில் புதிதாக அமைந்துள்ள லங்கா சதொச நிறுவனத்தின் கிளை இன்று (29) திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, மாகாணசபை உறுப்பினர் அஸங்க பெரேரா, முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலவி, சதொச நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர் எரங்க ஏக்கநாயக்க மற்றும் சதொச நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.  …

Read More