Headlines

சாதனை மாணவி முஷாதிகாவை நேரில் சென்று மனமாற வாழ்த்துக்களைத் தெரிவித்தார் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்!!!

இவ்வருடம் வெளியிடப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் விஞ்ஞானப் பிரிவில்  மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று வைத்தியத் துறைக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் திருகோணமலை மாவட்டம் மூதூர் சாபி நகரை சேர்ந்த மாணவி எம்.எப் முஸாதிகாவின் வீட்டுக்கு  நேற்று மாலை (28. 12. 2019) முன்னாள்  பிரதி அமைச்சர்  அப்துல்லா மஹ்ரூப் எம்.பி அவர்கள் நேரில் சென்று குறித்த மாணவிக்கும் அம்மாணவியின் பெற்றோருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு பரிசில்களையும் வழங்கி கௌரவபடுத்தி உள்ளார். குறித்த மாணவி எதிர்காலத்தில்…

Read More

குச்சவெளியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பதிவு செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்கள் மற்றும் சங்கங்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது நேற்று (24) குச்சவெளி பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலாளர் தனேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றுள்ளது. இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் துறை முகங்கள் கப்பற் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து   பாராளுமன்ற உறுப்பினரால் உரிய உபகரணங்கள்…

Read More

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மு.கா. மற்றும் அ.இ.ம.கா இணைத்து புத்தளமாவட்டத்தில் போட்டியிடுவது தொடர்பான கலந்துரையாடல்

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் புத்தளம் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,கூட்டிணைவு சம்பந்தமான முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த   (23) புத்தளம் நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளர் கே.ஏ.பாயிஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம்,கட்சியின் பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா,மற்றும் இரு கட்சியினதும் புத்தள மாவட்ட உயர்பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Read More

ரிஷாத் பதியுதீன் CIDயினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு விடுவிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் எம்.பி. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஒன்றுக்கு இன்று சி .ஐடியினரால் அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். நீண்ட நேரம் இடம்பெற்ற இந்த விசாரணையின் பின்னர் அவர் வெளியேறினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு தொடர்பு இருப்பதாக இனவாத சக்திகளும் சில கடும்போக்குவாத பெளத்த தேரர்களும் தொடர்ந்தேர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருவதுடன் அவரை விசாரணைக்குட்படுத்தி கைது செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தியும் வலுவான போராட்டம்…

Read More

ஒட்டமாவடி பல நோக்கு கூட்டுறவு சங்க பாலர் 36வது பாடசாலை மாணவர் வெளியேற்று விழா நிகழ்வு 21.12.2019 தலைவர் ஜிப்ரி கரீம் தலைமையில் இடம்பெற்றது .

ஒட்டமாவடி பல நோக்கு கூட்டுறவு சங்க பாலர் 36வது பாடசாலை மாணவர் வெளியேற்று விழா நிகழ்வு 21.12.2019 தலைவர் ஜிப்ரி கரீம் தலைமையில் இடம்பெற்றது . இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளர் காதர், முன்னாள் முகாமையாளர் முஸ்தபா , உதவி தலைவர் நியாஸ் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

அரச அதிபர்களிடம் முன்னாள் அமைச்சர் றிஷாட் வேண்டுகோள்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுகளை வழங்கி வைக்குமாறும் அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக நிற்கும் மக்களுக்கு உதவுமாறும் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். புத்தளம் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் இந்த அவசர வேண்டுகோளை அவர் விடுத்திருப்பதுடன். வெள்ளத்தின் காரணமாக அழிவுக்குள்ளானோரின் சொத்துக்களுக்கான நஷ்டஈட்டை வழங்க வேண்டுமெனவும் அரசையும் வேண்டியுள்ளார். “பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மாத்திரமன்றி மழைநீர் காரணமாக நிரம்பிய…

Read More

மு.கா, த தே, கூ  ஆதரவுடன் மக்கள் காங்கிரசின் முசலிப்பிரதேசபை பட்ஜட்   நிறைவேற்றம்..

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நிர்வாகத்தின் கீழான முசலிப்பிரதேசபையின் அடுத்தாண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் 11 உறுப்பினர்களின்  ஆதரவுடன் நிறைவேறியது. 16 உறுப்பினர்களை கொண்ட முசலிப்பிரதேசபையின்  வரவுசெலவுத்   திட்டம் இன்று (23) வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 5 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. அதாவது 4 உறுப்பினர்களை கொண்ட முஸ்லிம் காங்கிரசின் 2 உறுப்பினர்களும்,   பொதுஜனபெரமுனவை சேர்ந்த 1 உறுப்பினரும், சுதந்திரக்  கட்சியை சேர்ந்த 1 உறுப்பினரும்,நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை சேர்ந்த 1 உறுப்பினருமாக ஐவர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. எதிர்க்கட்சியான…

Read More

கட்டாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு வரவேற்பு

கட்டாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு வரவேற்பு. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்டார் கிளையின் ஏற்பாட்டில், கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு- *இன்று 16ஆம் திகதி (திங்கள் கிழமை), இரவு 8 மணிக்கு, ஸைடூன் ரெஸ்டோரண்ட், சல்வா வீதி, டோஹா கட்டாரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் கட்டார் வாழ் கட்சியின் ஆதரவாளர்கள் கீழ் உள்ள தொலைபேசி…

Read More

ஏறாவூர் மீரா முன்பள்ளி பரிசளிப்பு விழா தலைவர் றிப்னாஸ் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது .

ஏறாவூர் மீரா முன்பள்ளி பரிசளிப்பு விழா 13.12.2019  தலைவர் றிப்னாஸ் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது .இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் ஏறாவூர் பிரதேச செயலக செயலாளர் அல் அமீன், பொது சுகாதார அதிகாரி வைத்தியர் தாரிக் , பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவர் அல்ஹாஜ் லத்தீப், கணக்காளர் நெளபி மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலிக்கு றிப்னாஸ் ஆசிரியரால்…

Read More

கட்டாரில் அ.இ.ம.கா தேசிய தலைவர் ரிஷாத் பதியுதீனுக்கு வரவேற்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்டார் கிளையின் ஏற்பாட்டில்,  கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு-  இன்று 16ஆம் திகதி (திங்கள் கிழமை), ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (இடம் பின்னர் அறிவிக்கப்படும்) ஆகவே, குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் கட்டார் வாழ் கட்சியின் ஆதரவாளர்கள்  கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து உங்கள் வரவை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ???? வரவை கட்டாயம் உறுதிப்படுத்தவும், 0097470440075 0097430483082

Read More

டோஹா போரம் மாநாட்டில் ரிஷாத் பதியுதீன்

கட்டார் நாட்டில் இடம்பெறும் 19ஆவது “டோஹா போரம்” சர்வதேச மாநாட்டில் முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் (எம்.பி) பங்கேற்கின்றார். இந்த மாநாடு “பல்முனை உலகளாவிய சமூகத்தில், புத்துயிர் பெரும் ஆட்சி” எனும் தொனிப்பொருளில் நடைபெற்றுவருகிறது. கட்டார் நாட்டின் உத்தியோகபூர்வ அழைப்பையேற்றே, அவர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றார். இம் மாநாட்டை கட்டார் மன்னர் சேக் தமீம் ஆரம்பித்து வைத்தார். உலகின் பல நாடுகளிலுமிருந்து அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள் இந்த…

Read More

சஹ்­ரானை சந்­தைப்­ப­டுத்த முடி­யா­தென்­பதால் முஸ்­லிம்கள் இலக்கு வைக்­கப்­ப­டு­கி­றார்கள்: ரிஷாத் பதி­யுதீன்

இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் பயங்­க­ர­வாதி சஹ்­ரானால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்­களை  பெரும்­பான்மைச் சமூ­கத்தின் மத்­தியில் எடுத்­து­ரைத்தே  ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்­றார்கள் என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத்  பதி­யுதீன் தெரி­வித்­துள்ளார். எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மீண்டும் சஹ்­ரானை அர­சியல் ரீதியில் சந்­தைப்­ப­டுத்த முடி­யாது என்­பதால் அவர்­க­ளுக்குப் புதிய இலக்­குகள் தேவைப்­ப­டு­கி­றது. ஆகையால் அதற்கு தன்­னையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்­கீ­மையும் இலக்கு வைப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார். கொழும்பில் வெள்­ளிக்­கி­ழமை…

Read More