Headlines

புத்தளம் சமூகத்தின் நன்மதிப்பை பெற்றவராக மர்ஹூம் பீ.எம்.ஜனாப் திகழ்ந்துள்ளார் – தலைவர் ரிஷாட் அனுதாபம்!

புத்தளம் பெரிய பள்ளிவாசலின் முன்னாள் தலைவரும் முன்னாள் கிராம அதிகாரியும் சிறந்த சமூக சேவையாளருமான அல்ஹாஜ் பீ.எம்.ஜனாப் அவர்களின் மறைவு தொடர்பில், தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அன்னாருக்கு இறைவன் ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன வாழ்வை நல்கப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மர்ஹூம் பீ.எம்.ஜனாப் அவர்களின் மறைவு குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “புத்தள வரலாற்றில், 1990ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியானது…

Read More

மஜ்மா நகர் மக்களுக்குக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி M.S.S.அமீர் அலியின் வேண்டுகோளை ஏற்று, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நௌஸர் பௌஸியினால், மட்டக்களப்பு, மஜ்மா நகர் பிரதேச மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் சமீமின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில், பிரதேசத்தின் பயனாளிகள் மற்றும் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

Read More

ACJU சாளம்பைக்குளம் கிளை – முத்து முஹம்மட் எம்.பி சந்திப்பு!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் சாளம்பைக்குளம் பிரதேசக் கிளைக்கும், மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான M.I.முத்து முஹம்மட் ஆகியோருக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பொன்று, நேற்று (29) பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது. இக்கலந்துரையாடலில், பிரதேசக் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் N.P.ஜுனைத் (காஸிமி,மதனி), செயலாளர் அஷ்ஷெய்க் S.M.அப்துல் மஜீத் (காஸிமி), பொருளாளர் அஷ்ஷெய்க் K.றபியுதீன் (பக்ரி) மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பணிகள், பிரதேசக் கிளையின் செயல்பாடுகள் குறித்து பாராளுமன்ற…

Read More

தலைவர் ரிஷாட்டின் முயற்சியில் 7 கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் பாடசாலைக் கட்டிடம்!

நிர்மாணப் பணிகளை பார்வையிட நேரில் கள விஜயம்! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் புத்தளம், நாகவில்லு பிரதேசத்தின், எருக்கலம்பிட்டி முஸ்லிம் மஹா வித்தியாலத்தில், சுமார் 07 கோடி ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டு வரும், 3 மாடிக்கட்டிடத்தின் நிர்மாணப்பணிகளை தலைவர் ரிஷாட் ஞாயிற்றுக்கிழமை (29) நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி விஜயத்தின் போது, வகுப்பறைக் கட்டிட வேலைகளை துரிதப்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கிய அவர், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ், பாடசாலைக்குத் தேவையான…

Read More

நிந்தவூர் பாத்திமா முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா!

பிரதம அதிதியாக தாஹிர் எம்.பி பங்கேற்பு! நிந்தவூர் பாத்திமா முன்பள்ளி பாடசாலை நிர்வாகக் குழுவின் தலைவரும் கிராம சேவை உத்தியோகத்தருமான A.R.முஹம்மட் வஸீம் தலைமையில், சனிக்கிழமை (28) நிந்தவூர், வெளவாலோடை மைதானத்தில் இடம்பெற்ற முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வில், விசேட அதிதியாக கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் U.L.M.சாஜித், கௌரவ அதிதிகளாக பதில் நீதிபதி A.M.நஸீல், சட்டத்தரணி A.L.றியாஸ் ஆதம், அட்டாளைச்சேனை ஆசிரியர்…

Read More

வவுனியா பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம்!

வவுனியா பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம், அபிவிருத்திக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று (27) நடைபெற்றது. மேற்படி கூட்டங்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

Read More

டாக்டர்.மன்மோகன் சிங் மறைவுக்கு தலைவர் ரிஷாட் அனுதாபம்!

“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் மூளையாக பிரகாசித்த கலாநிதி மன்மோகன் சிங், இலங்கையின் பல்துறை அபிவிருத்திக்கு கைகொடுத்த ஒருவர், அவரது இழப்பு கவலைக்குரியது” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாரதத்தின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவு தொடர்பில், அவர் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கலாநிதி மன்மோகன் சிங், 2004 முதல் 2014 வரையான காலப்பகுதியில் 13ஆவது இந்தியப் பிரதமராகப் பணியாற்றியுள்ளார். 1991இல் நிதி…

Read More

ACJU நிந்தவூர் கிளை – தாஹிர் எம்.பி சந்திப்பு!

நிந்தவூர் பிரதேச அகில இலங்கை ஐம்இய்யதுல் உலமா சபையினருக்கும், மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் எம்.பிக்குமிடைடையிலான சந்திப்பொன்று, (26) மஸ்ஜிதுல் ஹக் பள்ளிவாசலில் இடம்பெற்றிருந்தது. இதன்போது, உலமா சபையினால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தஃவா பணியினை பாராட்டி பேசியிருந்த பாராளுமன்ற உறுப்பினர், ஊரின் மத்திய நிர்வாகக் கட்டமைப்பொன்றை உருவாக்குவது மற்றும் போதை மருந்து பாவனையை தடுப்பது குறித்தும் உலமாக்களுடன் விரிவாகக் கலந்துரையாடியிருந்ததுடன், எதிர்காலத்தில் உலமாக்களின் ஒத்துழைப்புக்களையும் வேண்டியிருந்தார். இந்நிகழ்வில், கட்சியின்…

Read More

பேராசிரியர் இஸ்ஹாக் அவர்களின் மறைவு கவலை தருகின்றது – தலைவர் ரிஷாட் அனுதாபம்!

சமூகம் சார்ந்த அதிகூடிய சிந்தனையினை சதாவும் கொண்டிருந்த கிழக்கிலங்கையின் கல்விப் பொக்கிஷமான பேராசிரியர் அல்ஹாஜ் எம்.இஸ்ஹாக் அவர்களின் மறைவு ஆழ்ந்த கவலையை அளிப்பதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அன்னாரின் ஜென்னதுல் பிர்தௌஸ் சுவன வாழ்வுக்காக தாம் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மர்ஹூம் இஸ்ஹாக் அவர்களின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது, “தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான பொறியியல்பீடத்தின் உருவாக்கத்திற்கு பெரும் பங்காற்றியதுடன், சிறந்த கல்வியியலாளர்களின் அவசியம் தொடர்பில்…

Read More

வவுனியா, தெற்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம்!

வவுனியா, தெற்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் (26) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Read More

நீண்டகால தேவையாக இருந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு!

சாளைம்பைக்கேணி 01ஆம், 05ஆம் கொலனி (அமீர் அலி மைதானம்) பிரதேச மக்கள், மிக நீண்டகாலமாக குடிநீர் பெறுவதில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக குழாய் கிணறை புனரமைத்து பாவனைக்கு உதவும் வகையில், செயற்படுத்த அதிக பிரயத்தனம் மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும், மயோன் சமூக சேவை அமைப்பின் தலைவருமான றிஸ்லி முஸ்தபாவின் கவனத்திற்கு இப்பிரச்சினை கிராமவாசிகளால் முன்வைக்கப்பட்டது. மக்களின் அத்தியாவாசிய தேவை…

Read More

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று (26) இடம்பெற்றது. செட்டிகுளம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட், தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், பிரதேச செயலாளர் திருமதி சுலோஜனா மற்றும் அரச அதிகாரிகள், கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட…

Read More