Headlines

VIDEO- முத்து முஹம்மட் எம்.பியின் பாராளுமன்ற கன்னி உரை!

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நோன்பு காலத்தில் வருவதால், முஸ்லிம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால், அரசாங்கம் இதுதொடர்பில் கருத்திற்கொண்டு, பரீட்சை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான M.I.முத்து முஹம்மட் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (07) இடம்பெற்ற, வருட ஆரம்ப நிதிநிலை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு, தனது கன்னி உரையை ஆற்றுகையிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்தார்….

Read More

ரோஹிங்கிய அகதிகள் தொடர்பில் தலைவர் ரிஷாட் ஜனாதிபதிக்கு கடிதம்!

இலங்கையில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியர்கள் தொடர்பில், சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தலைவர் ரிஷாட் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்! கடந்த டிசம்பர் மாதம் இலங்கையில் தஞ்சமடைந்துள்ள மியன்மார் நாட்டின் ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில், சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். மேற்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, (கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு)  கௌரவ  ஜனாதிபதி அவர்களுக்கு, இலங்கையில் புகலிடம் கோரி வரும் ரோஹிங்கியா…

Read More

‘பிஞ்சு மனம்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா!

வெலிகம, ரிம்ஸா முஹம்மத் எழுதிய ‘பிஞ்சு மனம்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா, ஞாயிற்றுக்கிழமை (05) கொழும்பு, தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்.

Read More

ஏறாவூர், ஓட்டுப்பள்ளி பிரதேச முக்கியஸ்தர்களுடனான ஒன்றுகூடல்!

ஏறாவூர், ஓட்டுப்பள்ளி பிரதேச முக்கியஸ்தர்களுடனான சினேகபூர்வ சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றது. இவ் ஒன்றுகூடல் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான M.S.S. அமீர் அலி மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான M.S. சுபைர் உள்ளிட்ட பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

அனுராதபுர மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு!

உள்ளூராட்சி மன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது குறித்தும் விரிவாக ஆராய்வு! அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று, கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அனுராதபுர மாவட்டத் தலைவருமான A.R.M.தாரிக் ஹாஜியாரின் தலைமையில் இடம்பெற்றது. ஞாயிற்றுக்கிழமை (05), அவரது இல்லத்தில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில், கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அனுராதபுரம் மாவட்டத்தில் எவ்வாறு கட்சியின் செயற்பாடுகளை அமைத்துக்கொள்வது மற்றும் எதிர்காலத்தில் கட்சியின் முன்னெடுப்புக்கள் எவ்வாறு…

Read More

வவுனியா றவ்ழத்துல் ஜன்னா மற்றும் அல் அக்ஸா முன்பள்ளிகளின் பரிசளிப்பு விழா – முத்து முஹம்மட் எம்.பி பங்கேற்பு!

வவுனியா, புதிய சாளம்பைக்குளம் றவ்ழத்துல் ஜன்னா முன்பள்ளி மற்றும் சாளம்பைக்குளம் அல் அக்ஸா முன்பள்ளி ஆகியவற்றின் வருடாந்த பரிசளிப்பு விழாக்கள் ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றன. மழலைகளின் கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமான இவ் விழாக்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன், சிறார்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

Read More

குருநாகல் மாவட்டத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பு!

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட எம்.டீ.எம்.முஸம்மில் அவர்களுக்கு, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (04) கல்கமுவ, வல்பாலுவ பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான எம்.டீ.எம்.முஸம்மில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான இர்பான், அஷார்டீன் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அஷாட் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

கிண்ணியா, அல் முனவ்வரா பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா – பிரதம அதிதியாக Dr.ஹில்மி மஹ்ரூப் பங்கேற்பு!

கிண்ணியா, பெரியாற்றுமுனை அல் முனவ்வரா பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, சனிக்கிழமை மிகச் சிறப்பாக (04) இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கிண்ணியா நகர சபையின் முன்னாள் மேயருமான Dr.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறார்களுக்கான பரிசில்களை வழங்கிவைத்தார். இதன்போது, கிண்ணியா பிரதேச செயளாலர் ஜனாப் கனி மற்றும் முக்கியஸ்தர்களும் விழாவில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Read More

புத்தளம், கரைத்தீவு “ரிஷாட் பதியுதீன்” முன்பள்ளி பரிசளிப்பு விழா!

பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட அமைப்பாளர் N.T.M.தாஹிர் பங்கேற்பு! புத்தளம், கரைத்தீவு “ரிஷாட் பதியுதீன்” முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழா, சனிக்கிழமை (04) முன்பள்ளி வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான N.T.M.தாஹிர் மற்றும் கட்சியின் கரைத்தீவு உறுப்பினர் ஷிபான் உட்பட முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

Read More

அல்-ஹிக்மா முன்பள்ளி விளையாட்டு விழா – பிரதம அதிதியாக தாஹிர் எம்.பி பங்கேற்பு!

நிந்தவூர் பிரதேச சபையின் பராமரிப்பில் இயங்கிவரும் அல் – ஹிக்மா முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா, பாடசாலை வளாகத்தில் (04) இடம்பெற்றது. நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் எஸ்.ஷிஹாபுத்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை ஆரம்பித்து வைத்தார். அத்துடன், போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான பரிசில்களையும், விடுகை பெற்று செல்லும் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களையும் வழங்கிவைத்தார். இதன்போது,…

Read More

வாரியப்பொல நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள பசார் ஜும்ஆ பள்ளிவாசலுக்கான அடிக்கல்நாட்டு விழா!

மிக நீண்ட வரலாற்றைக்கொண்ட குருநாகல், வாரியப்பொல நகர பள்ளிவாசல் நிர்மாணிப்புப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, வெள்ளிக்கிழமை (03) பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. சுபஹ் தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் அஷார்தீன் மொய்னுதீன் விஷேட அதிதியாகப் பங்கேற்றிருந்ததுடன், ACJU உப தலைவர் உமர்தீன் மௌலவி, ஹிதாயத்துல்லாஹ் மௌலவி உட்பட உலமாக்கள், வாரியப்பொல ஜமாஅத்தினர், தனவந்தர்கள், ஊர்ப் பிரமுகர்கள் எனப் பலரும் சமூகமளித்திருந்தனர். பல வருடங்களாக, இப்…

Read More

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்!

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில், இன்று (02) மாவட்ட செயலகக் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் திரேஷ் குமார் உட்பட பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Read More