Headlines

இலங்கை மகளிர் கபடி அணிக்கு வெண்கலப்பதக்கம்

ஆசிய கரையோர விளையாட்டுப் போட்டியில் இலங்கை மகளிர் கபடி அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது. வியட்னாமில் நடைபெற்று வரும் ஐந்தாவது ஆசிய கரையோர விளையாட்டுப் போட்டியிலே இலங்கை அணி பதக்கத்தை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் 43ற்கு31 என்ற அடிப்படையில் வெற்றி பெற்ற இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. தாய்லாந்து அணி 2ம் இடத்தைப் பெற்றது. இதற்கு முன்னர் இடம்பெற்ற ஆடவருக்கான கபடி போட்டியிலும் இலங்கைக்கு வெண்கலப்பதக்கம் கிடைக்கப் பெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியில் இதுவரை 16தங்கப்பதக்கங்களையும், 16 வெள்ளிப்பதக்கங்களையும்,…

Read More

ஆஸியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக கிரேம் ஹிக்

ஆஸி அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக முன்னாள் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரரான கிராம் ஹிக் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் நவம்பர் மாதம் தென்னாபிரிக்கா அணியுடனான தொடரிலிருந்து தனது பணியை ஆரம்பிக்கவுள்ளதாக ஆஸி  கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இவர் தென்னாபிரிக்கா போட்டியிலிருந்து தனது பணியை முன்னெடுத்தாலும்,  அடுத்த வருடம் இந்தியவுடன் இடம்பெறவுள்ள 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு வீரர்களை தயார்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. காரணம் இலங்கையுடனான டெஸ்ட் போட்டியின் தோல்வியுடன் கடந்த 9…

Read More

பரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது இலங்கை

ரியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் பதக்கம் வென்றுள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் எப் 46 பிரிவின் போட்டியில் தினேஷ் பிரியந்தஹேரத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இவர் இறுதி சுற்றில் 58.23 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து மூன்றாம்இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

டில்சான் ரி20 போட்டிகளிலிருந்து ஓய்வு

இலங்கை அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது ரி20 போட்டி இன்று இரவு 7மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இப்போட்டியை தொடர்ந்து திலகரத்ன டில்சான் ரி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவகாக அறிவித்துள்ளார். 79 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ள திலகரத்ன டில்சான் ஒரு சதம் மற்றும் 13 அரைச்சதங்களைப் அடங்கலாக 1888 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

Read More

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து டில்சான் ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரரான திலகரட்ன டில்சான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற போவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்ரேலியாவுடனான ஒரு நாள் போட்டி தொடர் முடிவுடன் டில்சான் ஓய்வுபெற போவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இதுவரையில் தமது ஓய்வு குறித்து டில்சான் உத்தியோகப்பூர்வ அறிவிக்கவில்லை என்பது கூறிப்பிடத்தக்கது.

Read More

கிரிக்கெட் போட்டியால் அதிக லாபம் ஈட்டிய இலங்கை

அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அதிக இலாபம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, அவுஸ்ரேலிய சுற்றுலா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டிக்கான அனுமதி சீட்டுக்கள் விற்பனையிலேயே 2,826,150 ரூபாய் பணம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் டெஸ்ட் போட்டி ஒன்றுக்காக…

Read More

முரளிதரன் இலங்கை நாட்டின் சிறந்த மகன் – சங்ககார

முத்தையா முரளிதரன் இலங்கை நாட்டின் சிறந்த மகன். அவர் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ள தேவையில்லையென இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும் விக்கட் காப்பாளருமான குமார் சங்கக்கார தமது உத்தியோகபூா்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். முரளிக்கு தன் நாட்டின் மீது அன்புள்ளது, மேலும் அவர் யாருக்கு வேண்டுமானாலும் ஆலோசகராக அல்லது பயிற்சியாளராகவும் செயற்படலாம். இலங்கை கிரிக்கெட் சபை முரளியிடம் பயிற்சியளிக்க இதுவரையும் கேட்டுக்கொண்டதில்லை. தனது நாட்டிற்காக தனது முழு திறமையினையும் வெளிபடுத்தியுள்ளவர். நாட்டிற்காக செயற்பட எப்போதும் தயாராகவே உள்ளார். இலங்கை கிரிக்கெட்…

Read More

முரளி கூறும் அதிர்ச்சி தகவல்!

அவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக இருப்பதால் என்னை துரோகி என கிரிக்கெட் சபை கூறுமானால், இலங்கையில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக வாய்ப்பு கொடுக்காத கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி என இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அவுஸ்திரேலியா அணிக்கு நான் போட்டிக்கு முன்னதான 10 நாட்களுக்கு மாத்திரமே பந்துவீச்சு ஆலோசகராக பணிபுரிகிறேன். அவுஸ்திரேலிய அணி என்னை முழுத்தொடருக்கும் ஆலோசகராக பணிபுரிய வேண்டும் என்று…

Read More

சர்வதேச கிரிக்கெட் பேரவை விபரங்கள் வௌியிடப்பட்டன

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அடுத்துவரும் பருவ காலமான 2016/2017 ம் ஆண்டுக்கான நடுவர் குழாம் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட குழாமில் பெரிதான மாற்றங்கள் இன்றி, இந்த குழாம் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய அணி பங்கெடுத்த போட்டிகளில் இந்தியாவுக்கு சார்பான, அல்லது தவறான தீர்ப்புக்கள் கொடுத்த நடுவர் ரவியும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார். இந்தக் குழுவில் 12 நடுவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். 2015/2016 ம் ஆண்டு பருவகாலத்தில் இடம்பெற்ற அனைத்து வகையான ஆட்டங்களில் 95.6 வீதமான…

Read More

ஐ.சி.சி. கிரிக்கெட் குழுவின் அங்கத்தவரானார் மஹேல

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன சர்வதேச கிரிக்கெட் சபையின்  கிரிக்கெட் குழுவின் அங்கத்தவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

Read More

குசல் பெரேராவின் தடை நீக்கம்

இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட்காப்பாளருமான  குசல் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு,மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குசல் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் குறித்த தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த தடைக்கு எதிராக குசல் பெரேரா சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். இதற்கமைய குசல் பெரேராவுக்கு  ஊக்க மருந்து சோதனையை நடத்திய கட்டாரைத் தளமாக…

Read More