Headlines

யார் முன்னிலையிலும் அரசாங்கம் மண்டியிடாது

நாட்டை ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற நல்லாட்சி அரசாங்கமானது யார் முன்னிலையும் மண்டியிடாது. எனினும், சகலருக்கும் காது கொடுப்பதற்கு தயாராகவே உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சாதாரண கோரிக்கைகளை யாராவது முன்வைத்தால், அவற்றுக்கு அரசாங்கம் காதுகொடுக்கும்.  எனினும், கண்டித்தோ அல்லது பயமுறுத்தியோ…

Read More

கூட்டு அரசாங்கமே சிறந்தது!

கூட்டு அரசாங்கத்தின் ஊடாக மக்களுக்கு சேவையாற்ற சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்றைய தினம் மல்வத்து பீடாதிபதியை சந்தித்த போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… இன்று கூட்டாக இணைந்து ஆட்சி நடத்தும் தரப்பினர், நாட்டை அபிவிருத்தி செய்ததன் பின்னர் பிரிந்து சென்றால் பிரச்சினையில்லை. ஏழு கூட்டுக்கள் என்ற அடிப்படையில் அரசாங்கம் அமைத்த காலங்களும்…

Read More

சுதந்திரம் பறிபோய்விட்டது – மஹிந்த

நாட்டுக்குள் நிலைகொண்டிருந்த சுதந்திரம், படிப்படியாக வரையறுக்கப்பட்டு வருகின்றது என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். திம்புலாகல தேரர் தொடர்பில் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ‘நாடாளுமன்றத்துக்குள்ளும், சுதந்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில், பெயர் மற்றும் ஊர்கள் குறிப்பிடப்பட்டு, நேரடியாகவே அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டும் வருகின்றன. தனிப்பட்ட ரீதியிலும் அழைக்கப்பட்டு, பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன’ என்றும் குறிப்பிட்டார். அத்துடன், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களையே, நல்லாட்சி அரசாங்கம் திறந்து வைத்து வருகின்றது…

Read More

2020 இல் புதிய அரசாங்கம் அமைக்க திட்டம்

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து முன்னெடுக்கும் ஆட்சியில் சவால்கள் பல உள்ளன. எனவே  2020 ஆம் ஆண்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருவதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். மேல்மாகாண சபை முதலமைச்சரின் உத்தியோபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளும் உரையும் இன்று பல விமர்சனங்களுக்கு உள்ளானவண்ணமுள்ளன. தற்போது…

Read More

தேசிய அரசாங்கத்தின் முதலாமாண்டு நிறைவு!

இலங்கையின் சமகால தேசிய நல்லிணக்க அரசாங்கத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு விசேட வைபவம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பான நிகழ்வில் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெறும். புதிய நாடு, புதிய பயணம் மற்றும் ஐந்து வருடங்களுக்கான பயணத்திற்கு முதலாண்டு நினைவாக இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளனர். சமகால அரசாங்கம் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த சலுகைகள், உரிமைகள் போன்றவற்றை வெளிக்காண்பிக்கும்…

Read More

நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது நிறைவாண்டு விழா

நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனை ஒழுங்கு செய்துள்ளார். 2015 ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடத்திய பொதுத் தேர்தல் மூலம் உருவான தேசிய அரசாங்கத்தின் மூலம் நாட்டிற்கும் மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற நன்மைகளை புலப்படுத்தும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த…

Read More

நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் – மஹிந்த

நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புகின்றனர். அதன் வெளிப்பாடு பாதயாத்திரை ஊடாக உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பாதயாத்திரையை குழப்புவதற்கு முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் கொழும்பை நோக்கி செல்வதை யாராலும் தடுத்துவிட முடியாது. பொதுமக்கள் எம்முடன் உள்ளமை உலகிற்கு வௌிப்பட்டுள்ளது. ஆகவே தடைகளை கடப்பது கடினமான விடயமல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read More

நல்லாட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது

இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த அரசாங்கத்தை சட்டரீதியாக எவராலும் வீழ்த்த முடியாது. இன்று பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன. இந்நிலையில் வேறு கட்சிகள் இணைந்து கூட்டணி அமைப்பதில் பலன் இல்லை என்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். மஹரமகவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்தி பயணத்தை ஸ்தம்பிக்கச் செய்வதற்கு சுயநல அரசியல்வாதிகள் சிலர் முயற்சித்து…

Read More

நாட்டின் நலன் கருதி எவருடனும் இணையத் தயார்-பிரதமர்

நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எந்தக்கட்சியுடனும் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை அதிகரிக்கும் நோக்கில் பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோதே  இந்தக் கருத்தை வெளியிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது ஜே.வி.பி என்று எந்தக்கட்சி முன்வந்தாலும் அந்த கட்சிகளுடன் இணைந்து செயற்பட அரசாங்கம் தயாராகவுள்ளது. மற்றவர்கள் அனைவரும் எதிர்ப்பை வெளியிடும்போது அரசாங்கம் மாத்திரமே திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை…

Read More

 ‘சர்வதேச விசாரணையை இல்லாமற் செய்வோம்’

-வி.நிரோஷினி – கடன் சுமையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் முனைப்புடன் செயற்படுவதுபோல, மனித உரிமைகள் விவகாரம் தொடர்பிலான சர்வதேச விசாரணையை முழுமையாக இல்லாமல் செய்ய தீவிரமாகச் செயற்பட்டுவருவதாக, பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

ஆதரித்தவர்களுக்கு மாத்திரம் உதவி – விமல் கண்டுபிடுப்பு

அனர்த்தத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள போதும் மக்களை பார்க்கச் சென்றவர்கள் தமது கட்சி ஆதரவாளர்கள் யாரென்று தேடிச்சென்று உதவிகளை வழங்கியமையும் கட்சி சார்ந்து உதவிகளை வழங்கியதையும் பார்க்க முடிந்தது. நல்லாட்சி அரசாங்கம் தம்மை ஆதரித்த நபர்களுக்கு மட்டுமே உதவிகளை செய்து வருகின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். அரசாங்கம் குறுகிய நோக்கத்தில் செயற்பட்டாலும் நாம் இன மத பேதமின்றி உதவிசெய்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட…

Read More

அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் – மஹிந்த

மரணித்தவர்களுக்கு உயிர் கொடுக்க முடியாது. ஆனால் அவர்களது குடும்பங்களை கட்டியெழுப்ப முடியும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதமாக முன்னெடுக்க வேண்டும் எனமுன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. யுமான மஹிந்த ராஜபக்ச நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றநாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பிலான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றகையிலேயே மஹிந்த ராஜபக்ச எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 1958ல் நாட்டில்…

Read More