Breaking
Sat. Apr 27th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், அனுராதபுரம், நேகம முஸ்லிம் மஹா வித்தியாலய மைதானத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மாலை (11) இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ராஜ் ஐனுல் ஹக் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட இணைப்பாளர் தாரிக், கல்னேவ பிரதேச சபை உறுப்பினர் ஹிஜாஸ் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமானுல்லா உட்பட பல அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

(ன)


Related Post