Headlines

ACMC Membership Registration | reg.acmc.lk | அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் உறுப்பினராக இணைந்துகொள்ள

Click Here to Join with ACMC or Register your Membership on All Ceylon Makkal Congress (ACMC) REG.ACMC.lk / இங்கு க்ளிக் செய்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஒன்லையின் படிவத்தை பூத்தி செய்யுங்கள்

Read More

“சிராஜுதீனின் நற்பணிகளை ஞாபகமூட்ட கட்சி கடமைப்படும்”

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! மானிடரின் நிலையில்லா வாழ்வினை அடிக்கடி நிகழும் எதிர்பாராத மரணங்கள் உணர்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பிரதம பொறியியலாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினருமான சிராஜுதீனின் மரணச் செய்தி குறித்து, அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது பற்றித் தெரிவித்த அவர், “துன்யாவின் அந்தஸ்துக்களை பொருட்படுத்தாத மானிட நேயன் மர்ஹூம் சிராஜுதீன்….

Read More

தலைவர் ரிஷாட் திருமலை விஜயம் – ஆதரவாளர்களுடன் சுமுகமான சந்திப்பு!

திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை, குச்சவெளி பகுதிகளுக்கு இன்றைய தினம் (03) விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச வாழ் மக்களை சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

Read More

VIDEO- “ஜனநாயகத்தை விலை பேசும் உள்ளூராட்சி தேர்தல் முறைய மாற்ற வேண்டும்” – தலைவர் ரிஷாட்!

உள்ளூராட்சித் தேர்தல் முறையில் மாற்றம் செய்யாவிட்டால், ஜனநாயகம் விலைபேசப்படுவதை நிறுத்த முடியாமல் போய்விடுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் (21) உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது; “நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில், எமது கட்சி நாடு முழுவதும் 140 ஆசனங்களை வென்றுள்ளது. இந்த வெற்றிக்காக வாக்களித்த சகலருக்கும் எனது நன்றிகள். எந்த வெற்றியைப் பெற்றாலும் பல சபைகளில் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய கட்சிகள், சுயேச்சைக்…

Read More

உள்ளூராட்சி தேர்தல் 2025; அம்பாறையில் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்த தலைவர் ரிஷாட்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) அம்பாறைக்கு விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், தொடர்ந்து இரு தினங்களாக (13,14) மாவட்டத்தின் பல பகுதிகளில், உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். அந்தவகையில், அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, பொத்துவில் பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, நாவிதன்வெளி பிரதேச சபை மற்றும் நிந்தவூர் பிரதேச…

Read More

உள்ளூராட்சி தேர்தல் 2025; புத்தளம் மாவட்ட வேட்பாளர்களின் காரியாலயம் திறந்து வைப்பு!

புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களின் கட்சிக் கிளை காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு மற்றும் மக்கள் சந்திப்புக்களில் தலைவர் ரிஷாட் பங்கேற்பு! கடந்த வெள்ளிக்கிழமை (11) புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் பிரதேச சபை, ஆரச்சிக்கட்டுவ பிரதேச சபை, கல்பிட்டிய பிரதேச சபை ஆகியவற்றில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும்…

Read More

VIDEO- இஸ்ரேலியர்களின் இலங்கைக்கான வருகையை சாதாரணமாக கருதிவிடாதீர்கள்;

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார். குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று (08) பாராளுமன்றத்தில்…

Read More

உள்ளூராட்சி தேர்தல் 2025; கொழும்பு மாவட்ட வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்!

கொழும்பு மாநகர சபை, கொலன்னாவ நகர சபை, கொடிகாவத்த – முல்லேரியா பிரதேச சபைகளில் ஜக்கிய மக்கள் சக்தி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலொன்று இன்று (03) கொழும்பில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலின் போது, உள்ளூராட்சி தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், தெஹிவளை-கல்கிஸ்ஸ மநாகர சபை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டமை…

Read More

“இஸ்ரேலின் எந்த ஈனச்செயல்களும் முஸ்லிம்களின் ஈமானை அழித்துவிடாது; இறுதி வெற்றியும் எமக்கே”

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! சர்வதேச அளவில் முஸ்லிம்கள் பாரிய சவால்களை எதிர்கொள்ளும் நிலையிலேயே, முஸ்லிம்கள் இம்முறை புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாட நேர்ந்துள்ளதாகவும் நெருக்கடிகள் நீங்கி, நிம்மதி ஏற்பட இந்நாளில் பிரார்த்திக்கும்படியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது, “முஸ்லிம்களுக்கு எதிரான ஸியோனிஸவாதிகளின் அத்துமீறல்கள் எல்லைமீறியுள்ளன. காஸாவில் ஈவிரக்கமின்றி இனவழிப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் இஸ்ரேலிய அரசு,…

Read More

தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அமெரிக்க தூதுவர் இடையே முக்கிய சந்திப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சாங்கை இன்றைய தினம் (26) கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, “இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருடன், எமது நீண்டகால தொடர்புகள் மற்றும் நிலைபேறான தன்மை குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போது,…

Read More

அமைப்பாளர் பதவிலிருந்து அமீர் இடைநிறுத்தம் – செயலாளர் சுபைர்தீன்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான அமைப்பாளர் பதவியிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும்  ஏ.கே.அமீர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில், அவர் மேலும் தெரிவிக்கையில், “இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலையில், கட்சியின் அமைப்பாளராக செயற்பட்ட ஏ.கே.அமீர் கட்சியின் தீர்மானத்தை மீறி, சுயேட்சைக் குழுவொன்றின் வேட்பாளராக வேட்புமனுவை தாக்கல் செய்தமையின் காரணமாக, அவர் அமைப்பாளர்…

Read More

உள்ளூராட்சி தேர்தல்; மக்கள் காங்கிரஸ் 13 மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, 13 மாவட்டங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை வியாழக்கிழமை (20) அந்தந்த மாவட்ட செயலகங்களில் தாக்கல் செய்தது. அந்தவகையில், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, புத்தளம், குருநாகல், அனுராதபுரம், கண்டி, மாத்தளை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்தும், ஐக்கிய மக்கள் சக்தியுடன்…

Read More