Breaking
Fri. Apr 26th, 2024

திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலகப் பிரிவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்கள் இன்று (12) திறந்து வைத்தார்.

தம்பலகாம பிரதேச செயலக பிரிவின் பொற்கேனி,மீரா நகர் உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளில் கொங்ரீட் வீதிகள் ,வடிகான்கள் என்பன மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

 குறித்த அபிவிருத்தி திட்டங்களை கம்பரெலிய, கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி விசேட நிகழ்ச்சித் திட்டம், நீண்டகாலம் இடம் பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவதற்கான திட்ட முகாமைத்துவ அலகு உள்ளிட்ட திட்டங்கள் ஊடாக பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் நடை முறைப்படுத்தப்பட்டன.

இவ் புதிய அபிவிருத்தி நிகழ்வுகளை மக்களிடம் கையளிக்கும் வைபவத்தில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர் தாலிப் அலி, பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட்டார வேட்பாளர்களான ஆபிலூன், ஏ.சீ.நஜிமுதீன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் என பலர் பங்கேற்றார்கள்.

Related Post