Breaking
Fri. Apr 26th, 2024

வில்­பத்து வன பாது­காப்புப் பகு­தியில் ஆக்­கி­ர­மிப்­புகள் இடம் பெறு­வ­தாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுகள் அடிப்­ப­டை­யற்­றவை. வில்­பத்து குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு 2017 இல் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட சுயா­தீன ஆணைக்­கு­ழுவின் அறிக்கை உட­ன­டி­யாக வெளி­யி­டப்­பட வேண்டும். பல தட­வைகள் கோரிக்கை விடுக்­கப்­பட்டும் ஆணைக்­கு­ழுவின் அறிக்கை இது­வரை வெளி­யி­டப்­ப­ட­வில்லை. இத­னாலேயே பல்­வேறு சந்­தே­கங்கள் தொடர்­கின்­றன என கைத்­தொழில், வர்த்­தகம் மற்றும் நீண்­ட­கா­ல­மாக இடம் பெயர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்றல் மற்றும் கூட்­டு­றவு அபி­வி­ருத்தி அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

வில்­பத்து வன பாது­காப்பு பகுதி தொடர்பில் கருத்துத் தெரி­விக்­கை­யிலே அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்; ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி ரஷ்யாவுக்கு பயணம் மேற்­கொண்­டி­ருந்­த­போது அங்­கி­ருந்து மாவில்லு பாது­காக்­கப்­பட்ட வன பிர­தேசம் என 40 ஆயி­ரத்து 30 ஹெக்­டயர் நிலத்­தினை வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் வெளி­யிட்டார். இந்த நிலப்­ப­ரப்பில் மக்கள் குடி­யேற்ற நிலங்கள், மேய்ச்சல் நிலம், வயற்­கா­ணிகள் உள்­ள­டங்­கி­யி­ருந்­தன. மாவில்லு, வேப்பல், கர­டிக்­குழி, மறிச்­சுக்­கட்டி, விலாத்­திக்­குளம் ஆகிய பகு­திகள் இதில் உள்­ள­டங்­கி­யி­ருந்­தன. அதனால் அப்­ப­கு­தி­மக்கள் மறிச்­சுக்­கட்டி பள்­ளி­வாசல் முன்னால் 43 நாட்கள் சத்­தி­யாக்­கி­ரக போராட்டம் நடத்­தினர்.

சத்­தி­யாக்­கி­ர­கத்தின் 42 ஆவது நாளில் ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் இது தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம் பெற்­றது. இதில் நான் உட்­பட அன்­றைய அமைச்சர் பைஸர் முஸ்­தபா, அசாத்­சாலி, முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் வை.எம்.எம்.ஏ உட்­பட சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் கலந்து கொண்­டனர். இந்­தச்­சந்­திப்பின் போதே இவ்­வி­வ­காரம் தொடர்பில் ஜனா­தி­ப­தி­யினால் சுயா­தீன ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்கத் தீர்­மா­னிக்­கப்­பட்டு ஆணைக்­கு­ழுவும் நிய­மிக்­கப்­பட்­டது. ஆணைக்­குழு விசா­ர­ணை­களை மேற்­கொண்டு 3 மாத காலத்தில் அறிக்­கை­யையும் சமர்ப்­பித்­தது. ஆனால் இது­வரை அந்த ஆணைக்­கு­ழுவின் அறிக்கை வெளி­யி­டப்­ப­ட­வில்லை. பல தட­வைகள் அறிக்­கையை வெளி­யி­டு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்டும் இது­வரை வெளி­யி­டப்­ப­டா­ம­லி­ருப்­ப­தற்கு என்ன காரணம் என்று தெரி­ய­வில்லை. பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­வொன்றை நிய­மித்து அறிக்­கையை வெளி­யி­டு­மாறு கோரியும் பலன் ஏற்­ப­ட­வில்லை.

இந்த ஆணைக்­கு­ழுவை பௌத்த குரு ஒரு­வரின் தலை­மை­யி­லான குழு­வொன்று அச்­சு­றுத்­தியும் வந்­தது. தற்­போது மீண்டும் வில்பத்து வன பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக பொய்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முடிவு காணும் வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்த சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கை உடனடியாக வெளியிடப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

Related Post