சிறு தையல் தொழிட்சாலை பயிற்சி நிலையம் , பயிற்சிகள் ஆரம்பம்.
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாட் பதீயுதீன் அவர்களால் திருகோணமலை மாவட்ட யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கானதிட்டத்தின் கீழ் சுய தொழிலை உருவாக்கிகொடுக்கும் நோக்கில்,
சிறு தையல் தொழிட்சாலை பயிற்சி நிலையங்கள், நேற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களினால் கிண்ணியா , தம்பலகமம் பிரதேசங்களில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைக்கப்ட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் தம்பலகாமம் பிரதேச சபை தலைவர் தாலிப் ஹாஜியார் கிண்ணியா பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ASM ரியாத் தம்பலகாமம் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் பசூர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்