Breaking
Sat. Jul 27th, 2024
ஊவா தேர்தலின் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய வேண்டுமென கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பில் தேர்தல்களின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

தேர்தல் பிரச்சாரங்களின் காரணமாக பேச்சுவார்த்தைக்கு திகதி ஒன்றை ஒதுக்குவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே தேர்தல்களின் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

எவ்வாறெனினும், தேர்தல் மேடைகளில் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வது குறித்து இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Related Post