Breaking
Sat. Jul 27th, 2024

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரண்கின்,அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.தற்போது வடக்கு,கிழக்கு சமாதான சூழல் குறித்து அமைச்சர றிசாத் பதியுதீன் உயர் ஸ்தானிகரிடம் எடுத்துரைத்ததுடன்,பிரித்தானிய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வாய்ப்புக்கள் ஒள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

தாம் புதிய உயர் ஸ்தானிகராக பதவியேற்றதன் பின்னர் முதலாவது தங்களை சந்தித்துள்ளதாகவும்,எதிர் காலத்திலும் இரு நாடுகளுக்குமான் வர்த்தக உறவுகள் குறித்து தொடர் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் உயர் ஸ்தானிகர் தெரிவித்ததுடன்,தாம் வடக்கிற்கு உத்தியுாகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் உயர் ஸ்தானிகர் அமைச்சரிடத்தில் எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post