மக்களின் வாழும் உரிமையை ஜனாதிபதியே உறுதி செய்தார்!– பசில் ராஜபக்ச

நாட்டின் அனைத்து இன மக்களும் அச்சமின்றி வாழக் கூடிய பின்னணியை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஏற்படுத்தியது.

நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொறுப்பாக மாறியுள்ளது.

வெளிநாட்டு சக்திகளிடமிருந்தும், உள்நாட்டு சதிகாரர்களிடமிருந்தும் நாட்டை காக்க வேண்டியது அவசியமானது.

ஜனநாயக அரசியலில் ஈடுபட்டு வரும் உலக நாடுகளில் இலங்கையின் சுதந்திரக் கட்சி முக்கிய இடத்தை வகித்து வருவதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் மத்துகம பிரதேசத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.