Breaking
Tue. Feb 18th, 2025
காஸாவில் உள்ள ஹமாஸ் போராளிகளை ஒடுக்குவதற்காக கடந்த 50 நாட்களாக சண்டையிட்டு வரும் இஸ்ரேல் நாட்டுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தும் விதமாக லெபனான் நாட்டில் இயங்கிவரும் போராளிக் குழுக்களும் இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.
இஸ்ரேல்- லெபனான் எல்லைப்பகுதியில் உள்ள கிர்யட் ஷ்மோனா மற்றும் மெடுலா நகரங்களின் மீது லெபனான் போராளிகள் 2 ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்த இஸ்ரேல், லெபனான் எல்லையோரமுள்ள பகுதிகளில் போர் விமானங்களின் மூலம் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றது.

Related Post