Breaking
Sat. Jul 27th, 2024

மழை, வெள்ளம் ஏற்படும் போது மழையை நிறுத்தவும் வறட்சிக் காலத்தில் வெயிலை நிறுத்தவும் அரசாங்கத்தினால் முடியாது.

எனினும், மக்கள் வாழ்க்கையை எடுத்துச் செல்ல நிவாரணங்கள் வழங்க முடியும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மக்கள் நம்ப வேண்டும். எதிர்வரும் ஆண்டுகளில் நாட்டில் நிலவி வரும் குறைபாடுகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு வழங்கப்படும்.

நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முயற்சி எடுக்கப்படும். தொடர்ச்சியாக அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் கனேவல்பொலவில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related Post