Breaking
Sat. Dec 6th, 2025

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி நிதி ஒதுக்கீட்டின் மூலம் பொத்தானை பள்ளிவாசல் சுற்று மதில் அமைப்பதற்காக பத்து லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது இதனை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது..

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வுக்கு கோறளைப் பற்று பிரதேச சபை தவிசாளர் அஸ்மி , பிரதேச சபை நிர்வாக உத்தியோகத்தர் அக்பர் மற்றும் ஊர் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Related Post