Breaking
Mon. Apr 29th, 2024

இந்து ,பெளத்த மதங்­களை பாது­காப்­ப­தற்­கான பெளத்த, இந்து தர்ம பாது­காப்பு சபை நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பில் உத­ய­மா­னது. பொது­ப­ல­சே­னாவும் அகில இலங்கை இந்து சம்­மே­ள­னமும் இணைந்து இவ்­வ­மைப்பை உரு­வாக்­கி­யுள்­ளன.
 
இதற்­கான உடன்­பாடு பொது­ப­ல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கும் இந்து சம்­மே­ள­னத்தின் தலைவர் அருண் காந்­துக்­கு­மி­டையே பௌத்த,இந்து ஏற்­ப­டுத்திக் கொள்­ளப்­பட்­டது.
 
இது தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று கொழும்பில் இடம்­பெற்­றது. இதன்­போது கருத்து தெரி­வித்த பொது­பல சேனாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மத மாற்­றத்தை எதிர்த்து தமிழ் இந்­துக்கள் எழுச்சி பெற வேண்­டிய காலம் வந்து விட்­டது.
 
எனவே, இனியும் பொறுமை காக்­காது இந்­துக்­களும் பெளத்­தர்­களும் ஒன்­று­பட வேண்டும். இன்று அதற்­கான பல­மான ஆரம்­பத்தை எடுத்து வைத்­துள்ளோம்.அதனை மேலும் பலப்­ப­டுத்தி மத­மாற்­றத்­தி­லி­ருந்து அடிப்­ப­டை­வாத சக்­தி­க­ளி­ட­மி­ருந்து எமது மதங்­க­ளையும் கலா­சா­ரத்­தையும் பாது­காத்துக் கொள்வோம்.பெளத்­தர்­களோ இந்­துக்­களோ தமது மதத்­திற்கு முஸ்­லிம்­க­ளையோ கிறிஸ்­த­வர்­க­ளைவோ மாற்­ற­வில்லை. மாறாக அடிப்­ப­டை­வாத முஸ்­லிம்­களும் கிறிஸ்­த­வர்­க­ளுமே இந்­துக்­க­ளையும் பெளத்­தர்­க­ளையும் மத­மாற்றம் செய்­கின்­றனர்.
 
வடக்கு கிழக்கில் மட்­டுல்ல தெற்கு மேல் மாகாணம் என அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் எமது மக்கள் மத­மாற்றம் செய்­யப்­ப­டு­கின்­றனர். யாழ்ப்­பா­ணத்தில் இரா­ணுவ முகாம்­களில் புத்தர் சிலைகள் வைக்­கப்­ப­டு­வதை எதிர்த்து தமிழ் அர­சி­யல்­வா­திகள் பாரா­ளு­மன்­றத்தில் குரல் கொடுக்­கின்­றனர்.ஆனால், யாழ்ப்­பா­ணத்தில் காளான்­க­ளைப்­போன்று உரு­வெ­டுக்கும் முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் இவர்­களின் கண்­க­ளுக்கு தெரி­ய­வில்­லையா.
 
அது மட்­டுமா தமிழ் கிரா­மங்கள் பூண்­டோடு முஸ்லிம் மய­மாக்­கப்­ப­டு­கின்­றது. நாடு முழு­வதும் அடிப்­ப­டை­வாத கிறிஸ்­தவ சபைகள் தலை­தூக்­கி­யுள்­ளன. மக்­களின் வறு­மையை போக்கி அடிப்­படை வச­தி­களை வழங்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். அமைப்­புக்­களால் அதனை செய்ய முடி­யாது.
 
கல்­முனை அக்­க­ரைப்­பற்று தமிழ் மக்கள் தாம் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் தொடர்­பாக நேர­டி­யாக கண்­ட­றிய வரு­மாறு எமக்கு அழைப்பு விடுத்­துள்­ளனர். விரைவில் அங்கு செல்வோம்.

அது மட்­டு­மல்­லாது பெளத்த இந்து மதங்­க­ளி­டையே ஒற்­று­மையை வலுப்­ப­டுத்­து­வ­தற்­காக வடக்­கிற்கும் விஜயம் செய்­ய­வுள்ளோம். யுத்­தத்தால் சிதைந்து போன தமிழ் மக்­களின் உள்­ளங்­களை ஆசு­வா­சப்­ப­டுத்தி மீண்டும் எமக்கிடையேயான நட்புறவை பலப்படுத்துவோம் என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார்.இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பொதுபலசேனாவின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனிய நந்த தேரர் மற்றும் இந்து சம்மேளனத்தின் செயலாளர் எம். முரளீதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *