Breaking
Mon. Dec 8th, 2025
இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடுகளும் இஸ்லாமிய சட்டங்களும் நாட்டில் செயற்படுவது முஸ்லிம்கள் ஆயுதமேந்தி போராடக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும். நாட்டில் முஸ்லிம் தீவிரவாதமொன்றினை உருவாக்கும் ஷரி – ஆ சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் எனத் தெரிவிக்கும் பொதுபல சேனா பௌத்த அமைப்பு சிங்கள சமூகத்தை சீரழிக்கும் முஸ்லிம் மதவாதத்துக்க ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் எனவும் சுட்டிக்காட்டியது.
பொதுபல சேனா பௌத்த அமைப்பினால் நேற்று கொழும்பு கிருலப்பனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவ்வமைப்பின் பணிப்பாளர் டிலந்த விதாகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related Post