Breaking
Fri. Dec 5th, 2025

மினுவாங்கொடை – கல்லொழுவை பிரதேசத்தில் வாழும் வருமானமற்ற ஏழை விதவைப் பெண்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கும் நிகழ்வு, (06) திங்கட்கிழமை மாலை, அ.இ.ம.கா. தேசிய மகளிர் அணித் தலைவி டொக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பையின் தலைமையில், அவரது இல்லத்தில் இடம்பெற்றது. அ.இ.ம.கா. கம்பஹா மாவட்ட மத்திய குழுத் தலைவரும், மினுவாங்கொடை தொகுதி அமைப்பாளரும், தேசிய மகளிர் அணித் தலைவியின் செயலாளருமான டொக்டர் எம்.எச்.எம். முனாஸிக் உள்ளிட்ட பிரமுகர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

Related Post