Breaking
Fri. Dec 5th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் ஷரீபின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, முசலி கோட்ட மட்ட பாடசாலைகளில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

சுமார் 25 பாடசாலைகளைச் சேர்ந்த 50 மாணவர்கள் அன்பளிப்புக்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் கல்வியில் ஒரு போட்டியை உண்டாக்கும் திட்டமாகவும் எதிர்காலத்தில் மாணவர்களின் கல்வியில் ஒரு மாற்றத்தை உண்டாக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீன் கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில், வலயக்கல்வி பணிப்பாளர், கோட்டக்கல்வி பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

(ன)

Related Post