Breaking
Tue. May 14th, 2024

அங்காரா:

இஸ்லாத்தின்   இறுதி தூதரான   முஹம்மது   நபியை    குறித்து    இயேசு  (ஈஸா நபி)  முன்னறிவிப்புச் செய்யும்   15 நூற்றாண்டுகள்   பழமையான  பைபிள் துருக்கியில் கண்டெடுக்கப்பட்டது. பர்ணபாஸின்   சுவிசேஷம்  என்று  அழைக்கப்படும்  இந்தநூல்  12  ஆண்டுகளாக  துருக்கியில் ரகசியமாக  பாதுகாக்கப்பட்டு   வந்துள்ளது.

பைபிளில்  கூறப்படும் பர்ணபாஸ் இயேசுவின் முக்கியசீடராவார்.  இந்த நூலை பார்ப்பதற்கு   16-வது  போப்பெனடிக்ட்   விருப்பம் தெரிவித்துள்ளார்.

இறுதி தூதர் முஹம்மது நபியின்  வருகையை குறித்தும்,   இயேசுவின் இஸ்லாம்  குறித்த பார்வையை விளக்கும்   இந்த நூலின்  உள்ளடக்கம்,   தற்போது   நடைமுறையில்  இருக்கும்   பைபிளில் காணப்படும்  கருத்துக்களுடன்   முரண்படுவதால்,   கிறிஸ்தவ  தலைமை இந்நூலை மூடி மறைத்துள்ளது   என்று   துருக்கியின் கலாச்சார-சுற்றுலா துறை   அமைச்சர்  உர்த்துக் ரூல்குனாய் செய்தியாளர்களிடம்  கூறினார்.

யேசு ஆரம்ப  காலக்கட்டத்தில்   கூறிய  கட்டளைகளும்,   முன்னறிவிப்புகளும்  விலங்கின்   தோலில் எழுதப்பட்டுள்ள   இந்நூலில் அடங்கியுள்ளன.   இதில்   மிகவும்  முக்கியத்துவம்  வாய்ந்ததுதான்
முஹம்மது நபி  (ஸல்)   அவர்கள்   குறித்த  முன்னறிவிப்பாகும்.

யேசு பேசிய மொழியான  அராமிக்கில்   எழுதப்பட்டுள்ள இந்த நூல் 12  ஆண்டுகளுக்கு முன்பு கள்ள கடத்தல்காரர்களை   கைது செய்யும்   நடவடிக்கையின்  போது   துருக்கி போலீஸ் கண்டுபிடித்தது.

இந்த   புத்தகத்தின்   மதிப்பு   22   மில்லியன்  ஆகும்.   இந்த நூலின் ஒரு பக்கத்திற்கான  நகலுக்கு 2.4 மில்லியன் டாலர் மதிப்பாகும்.

யேசு  (இறைத்தூதர் ஈஸா (அலை))  அவர்கள் இறுதி தூதர் முஹம்மது நபி (ஸல்)  அவர்களை குறித்து தனது சீடர்களிடம்  முன்னறிவிப்பு செய்துள்ளார்.   இறுதி தூதர்  வரும் வேளையில்  அவரை நம்பி ஏற்றுக்கொள்ள   வேண்டும்  என்று   யேசு   கூறியுள்ளார்   என்று முஸ்லிம்கள்  நம்புகின்றார்கள்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *