Breaking
Fri. Apr 26th, 2024

பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக இனிப்பான வற்றை கொடுப்பது நபி வழியாகும்

நபிகள் நாயகம் பேரித்தம் பழத்தை மென்மையாக பிசைந்து பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக கொடுத்துள்ளார்கள் அப்படி கொடுக்கவும் கர்பித்துர்ள்ளார்கள்

பேரித்தம் பழத்தை பெற்று கொள்ளதவர்கள் சீனி தேன் போன்ற இனிப்பான பொருள்களை தொட்டு பிறந்த குழந்தையின் நாவில் தடவுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் இது நபி வழியில் இருந்து பெறப்பட்ட அறிவாகும்

நபிகள் நாயகம் சர்வசாதரணமாக இந்த அறிவை நமக்கு கற்று தந்து சென்றிருக்கிறார்கள்

ஆனால் இந்த அறிவுக்கு பின்னால் மிக பெரியதொரு மருத்துவ குணம் ஒளிந்திருக்கிறது என்பதை அன்றைய கால மக்கள் அறிந்திருக்க வாய்பில்லை

ஆம் பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக இனிப்பை வழங்குவதினால் அவர்கள் மூளை சிதைவு நோயிலிருந்து இருந்து பாது காக்க படுகின்றனர்
என்று நவீன ஆய்வுகள் உறுதி படுத்தியுள்ளதாக சவுதி அரேபியாவை சார்ந்த மருத்துவர் குளரி என்பவர் சுட்டி காட்டியிருக்கிறார்

நவீன ஆய்வுகளுக்கு பிறகு உறுதி செய்ய பட்டுள்ள மருத்துவ உண்மையை உள்ளடக்கிய இந்த விசயத்தை விஞ்ஞானத்தின் கண்கள் இறுக கட்ட பட்டிருந்த காலத்தில் நபிகள் நாயகத்தால் எப்படி சொல்லமுடிந்தது

அவர் சாதாரண மனிதர் என்ற நிலையில் இருந்து இந்த வழிகாட்டுதலை வழங்க வாய்பே இல்லை
அவர்கள் இறைவனின் துதராக இருந்ததால் இப்படி ஒரு மருத்துவ உண்மையை உள்ளடக்கிய இந்த வழிகாட்டுதலை தமது சமுதாயத்திர்கு அவர்களால் வழங்க முடிந்தது

எனவே நபிகள் நாயகத்தின் இந்த வழிகாட்டுதலும் நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துதர் என்பதை அறுதியிட்டு உறுதி கூறும் அர்புத சான்றுகளில் ஒன்றாக அமைகிறது
இதர்கு சான்றாக பல நபி மொழிகள் உள்ளன சான்றிர்காக ஒரே ஒரு நபி மொழியை மட்டும் இங்கு அதன் அரபி மூலத்தோடு பதிவு செய்கிறேன்

أخرج البخارى في صحيحه عن أسماء بنت أبى بكر الصديق رضي الله عنهما أنها حملت بعبد الله بن الزبير بمكة. قالت خرجت وأنا متم فأتيت المدينة فنزلت قباء فولدت بقباء ثم أتيت به رسول الله صلى الله عليه وسلم فوضعته في حجره ثم دعا بتمرة فمضغها ثم تفل في فيه فكان أول شيء دخل جوفه ريق رسول الله صلى الله عليه وسلم ثم حنكه بالتمر ثم دعا له فبرك عليه، فكان أول مولود يولد في الإسلام ففرحوا به فرحا شديدا،لأنهم قد قيل لهم أن اليهود سحرتكم فلا يولد لكم.(كتاب العقيقة الحديث رقم/47500وكتاب المناقب حديث رقم 3619وأخرجه أيضا مسلم في صحيحه كتاب الآداب رقم 3999وأخرجه أحمد في مسنده في مسند الأنصار حديث رقم25701).

அஸ்மாபின்து அபு பக்கர் அவர்கள் நிறை மாத கர்பத்தோடு மதினா வந்து சேர்ந்தார்கள் மதீனாவில் உள்ள குபா பள்ளியின் முற்றத்திலேயே அவர்கள் தங்கினார்கள் அங்கேயே அவர்கள் அப்துல்லா பின் சுபைர் அவர்களை பெற்று எடுதடதார்கள் உடனே அந்த குழந்தையை எடுத்து வந்து நபிகள் நாயகத்தின் மடியில் வைத்தார்கள் நபிகள் நாயகம் பேரித்தம் பழம் ஒன்றை எடுத்து தனது வாயில் வைத்து மென்று மென்மையாக்கி அதை அந்து குழந்தைக்கு வழங்கினார்கள் அந்த குழந்தைக்காக பிரார்தனையும் செய்தார்கள்

அந்த குழந்தை நபிகள் நாயகம் மதீனாவிர்கு வந்த பிறகு பிறந்த முதல் குழந்தையாகும் முஸ்லிம்களுக்கு குழந்தைகள் பிறக்காமலிருக்க யுதர்கள் சூனியம் வைத்துள்ளனர் என்று சொல்ல பட்டு வந்த நிலையில் இந்த குழந்தை பிறந்ததால் முஸ்லிம்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்
அறிவிப்பவர் அஸ்மா பின்த் அபு பக்கர் ஆதரம் புகாரி

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *