Breaking
Sat. Apr 27th, 2024

பூகம்பம் எப்படி உருவாகும்..?

பூமிக்கு கீழே கண்டத்திட்டுகள் நகர்ந்து ஒன்றோடொன்று உராய்வது தான் பூகம்பத்துக்கு காரனம் என அறிவியல் சொல்கிறது…

இத அப்படியே மனசுல வச்சுக்கிட்டு வாங்க..

அல்லாஹ் தனது வேதத்தில் “பூமியின் மீது மலைகளை முளைகளாக நட்டி வைத்திருக்கிறோம்..உங்களை அசைத்து விடாது இருப்பதற்காக” ன்னு சொல்கிறான்…

முளைகள்னா என்ன?

இரண்டு வேறு வேறான நிலைகள் கொண்ட பொருட்களை ஒன்னோடு ஒன்னா இணைப்பது தான் முளைகள்..அதன்படி பூமியின் உள்பகுதி திரவத்திற்கு சமமான நிலையிலும்,மேற்பகுதி திடமான நிலையிலும் இருக்கு. கிட்டத்தட்ட ஒரு முட்டை மாதிரி..

உதாரணமா நீங்க ஒரு முட்டைய எடுத்து வேகமா சுத்தி விட்டுட்டு நாலு சுத்து முடிஞ்சதும் நிப்பாட்டிட்டு மறுபடியும் கைய எடுத்துருங்க..முட்டை தானாவே சுத்தும்..அது மாதிரிதான் பூமியும்..

அதோட மேல்பகுதியும்,உள்பகுதியும் தனித்தனியா சுத்துனா ஒரு பய பூமில வசிக்க முடியாது..

அப்படி ஆகிராம இருக்கத்தான் பூமிக்கு முளைகளாக மலைகள் இருக்குன்னு இஸ்லாம் சொல்லுது..இதை இன்றைய நவீன அறிவியலும் ஒப்புக்கொண்டு விட்டது…

இதன் மூலம் இஸ்லாம் சொல்வது உண்மைதான்னு நிரூபணம் ஆகிருச்சு..

இதுல பூகம்பம் எங்கடா வருதுன்னு அவசரப்படாதீங்க…

தனித்தனியே சுழலும் இரண்டு பொருட்களை இணைத்து ஆணியடிக்கனும்னா அதோட வேகத்தை கட்டுப்படுத்துற அளவுக்கு அந்த ஆணியோட உயரம்,பருமன் எல்லாம் இருக்கனும்ல..

அதனால தான் இறைவன் எந்த இடத்துல எவ்வளவு உயரத்துல எவ்வளவு பருமன்ல வேணுமோ அதுக்கேத்த மாதிரி மலைகளை நட்டி வச்சிருக்கான்…

ஆனா அந்த சரியான அளவை உடைக்குற மாதிரி மலைகளை உடைக்க ஆரம்பிச்சோம் நாம..

என்னைக்கு மனுசப்பய மலைய குடைய ஆரம்பிச்சானோ அன்னைல இருந்துதான் பூகம்பம் அதிகமாச்சு…

ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி இவ்வளவு பூகம்பம் வரல..ஏன்னா அன்னைக்கு கொஞ்சமாத்தான் மலையை வெட்டி எடுத்தான் மனுசன்..

ஆனா இன்னைக்கு ராட்சத எந்திரங்கள வச்சு பெரிய பெரிய மலைகளையே காணாமல் போக வச்சுட்டான் மனுசன்..ரோடு போட,வீடு கட்ட,அம்மிக்கு,ஆட்டுரலுக்கு,கிராநைட்டுக்கு,ஆராய்ச்சிக்குன்னு கண்ட கண்ட காரணம் எல்லாம் சொல்லிக்கிட்டு உலகத்துல இருக்கும் பல மலைகளுக்கு மரணத்த குடுத்துட்டு இருக்கான் மனுசன்…

அடிச்சு வச்சிருக்கும் ஆணிய புடுங்கி எடுத்துட்டா அப்புறம் எப்படிய்யா அஸ்திவாரம் இருக்கும்?

தேவையா இருக்கேன்னு நீங்க கேக்கலாம்…

அதயும் இஸ்லாம் முன்னறிவிப்பா சொல்லுதே..
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொன்னார்கள்..
“இறுதி நாளை நெருங்கும்போது பூகம்பங்கள் அதிகமாகும்”

மனுசன் நல்லா இருக்குற மலைய எல்லாம் உடைச்சு எடுப்பான்..அதனால பூகம்பம் ஜாஸ்தியா வரத்தான் செய்யும்னு படைச்சவன் தன்னோட தூதர் மூலமா 1400வருசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டான்…

இதன் மூலமும் இஸ்லாம் தான் உன்மையான இறைவனின் மார்க்கம் என்பது உறுதியாகிறது….

இறைக்கட்டளைக்கு மாறு செய்தால் அழிவுதான் மிஞ்சும் என்பதை உணர்ந்து இறைவழி நடக்கும் நன்மக்களாக நம்மை அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக…

ஆமீன்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *