Breaking
Fri. Apr 26th, 2024

வெள்ளவத்தையில் அடாத்தாக காணிபிடித்துள்ள பெளத்த மதகுரு வில்பத்தை முஸ்லிம்கள் அழிப்பதாக நீலிக்கண்ணீர் வடிக்கின்றார் :  பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாத் குற்றச்சாட்டு 

கொழும்பு,  வெள்ளவத்தையில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியொன்றை அடாத்தாக பிடித்துக்கொ சண்டித்தனம் காட்டிவரும் பெளத்த மத குரு ஒருவரே வில்பத்து காட்டை வடக்கு முஸ்லிம்கள்  அழிப்பதாக தினமும்…

Read More

அமைச்சர் றிஷாட் ஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தைப் பேணிச் செயற்படுவது இன்றியமையததாகும்!!!

இந்த நாட்டின் ஆட்சி மாற்றம் நடைபெறுவதற்கு ஊடகவியலாளர்களின் பங்குமிகப்பிரதானமானதாகும்.அதேபோல் இந்த ஆட்சியை தொலைக்க வேண்டும் என்றும் ஊடகவியலாளர்கள்செயற்படுகின்றார்கள் ஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தைப் பேணிச் செயற்படுவது இன்றியமையததாகும்என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டஊடகவியலாளர்கள் மற்றும் சமூகசேவையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு சம்மேளனத்தின் தலைவர்கலாபூசணம் மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் நேற்று முன்தினம் (31.03.2019) மாலை கல்முனை ஆஷாத்பிளாசா மண்டபத்தில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி,பிரதியமைச்சர் பாலிததேவபெரும,பாராளுமன்றஉறுப்பினர்களான சிறியானி விஜயவிக்ரம,ஏ.எல்.எம்.நஸீர்,கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில்,முன்னாள்கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல்,கே.எம்.அப்துல் றசாக் உட்படஅதிகாரிகள்,உத்தியோகத்தர்கள் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள்,நிறுவனத்தலைவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். அவர் மேலும் உரையாற்றுகையில், இந்த சின்ன நாட்டில் ஆட்சி மாற்றங்கள்  நடைபெறுகின்றபோது பொருளாதார அபிவிருத்தி உட்பட பலஇன்னல்கள் நடைபெற வாய்புள்ளன.அதனால் எதிர்காலம் சிறப்பாக அமையுமா என்ற கேள்வியும் என்முன்னால் உள்ளது. ஊடகவியலாளர்களிடத்தில் தர்மம் இருந்தாலும் ஊடகத்தில் தர்மம் இருக்க வேண்டும் இரண்டும்சமாந்திரமாக இருக்கும் போதுதான் இந்த நாட்டில் சமாதானம்,சகவாழ்வு,சமத்துவம்,பொருளாதாரம் சரியாகஅமையப்பெறும்.சில ஊடகவியலாளர்கள் தங்களது மனச்சாட்சிப்படி  செய்திகளை எழுதுவதற்கும்வாசிப்பதற்கும்,பேசுவதற்கும் முடியாமல்  தவித்துக் கொண்டிருப்பதையும் நாங்கள் காண்கின்றோம். இந்த நாட்டில் 30,40 வருடங்கள் யுத்தம் நடைபெற்றுள்ளன இன்றும் இதன் வடுகள் மாறவில்லை இந்தயுத்தத்தினால் தமிழ் மக்கள் மாத்திரமல்ல முஸ்லிம் ,சிங்கள மக்களும் பாதிப்படைந்துள்ளனர்.யுத்தத்திற்கானகாரணம் என்னவென்று தேடிப்பார்க்கின்றபோது அங்கே சில அரசியல் தலைமைத்துவங்கள் விட்டதவறுகளால்தான் அல்லது சில அரசியல் தலைமைத்துவங்கள் கண்டு கொள்ளாத காரணங்களால்தான் பாரியயுத்தம் இந்த நாட்டில் நடைபெற்றுள்ளது.இதன் பாதிப்பினால் இன்றும் இந்த நாடு மிக மோசமான நிலையில்உள்ளது. அதுமட்டுமல்ல பொருளாதார ரீதியாகவும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.அந்த வகையில்இன்னுமொரு சமூதாயத்தை அண்மைக்காலமாக சீண்டிப்பார்க்கும் அராஜக நிலையைத்தோற்றிவித்துள்ளனர்.பல வகையிலும் சீண்டுகின்றனர் நாங்கள் இன்னும் பொறுமையாகவுள்ளோம். இன்று நாட்டில் குறிப்பிட்ட சிலர் இனவாதத்தை தூக்கிப் பிடிக்கின்றனர். வில்பத்து என்ற இடத்தில் 1990ம்ஆண்டுக்கு முன் எமது முஸ்லிம் மக்கள் வாழ்ந்தனர். அவர்களது இடத்தில் மீள்குடியேற்றம் இடம்பெறும்போதுதான் காடுகளை அழிக்கின்றோம் என்று எனக்கெதிரான பொய்ப்பிரச்சாரங்களை சொல்லிவருகின்றனர். கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் எனக்கெதிராகப் போராட்டம் நடாத்தினார்கள். எதிர்காலத்தில்பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகளாக உயர் பதவி வகிப்பவராக வரவுள்ள இச்சந்ததியினர் மத்தியில் நஞ்சைஊட்டுகின்ற அநாகரீகமான கலாசாரம் இந்த நாட்டில் யுத்தத்திற்குப் பின்னர் திணிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாங்கள் முகங்கொடுக்க அச்சப்பட வேண்டிய தேவை கிடையாது. ஒரு பொய்யை வைத்துக்கொண்டுநமக்கெதிராகக் கட்டவிழ்த்து நாங்கள் அமைதியாக இருக்க வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்பார்களாகஇருந்தால் அதனை நாங்கள் செய்வோமாக இருந்தால் இறைவனிடத்தில் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறான பிரச்சனைகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும்முகங்கொடுத்து வருகின்றது. நாங்கள் எங்கள் பிள்ளைகளை நல்ல மார்க்க கல்வியோடு நல்ல ஒழுக்கத்தோடுவளர்த்துக்கொள்ள வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. நமக்கு முன்னாலிருக்கின்ற சவால்கள் நாங்கள் செய்யாத தவறு செய்ததாக திணிக்கின்றார்கள். எங்களைஅநியாயமாக வம்புக்கிழுக்கின்றார்கள். எங்கள் மார்க்கம் சொத்துக்கள் எங்கள் மீதும் எதிர்காலத்தின் மீதும்கை வைத்து எங்களைச் சீண்டுகின்ற அநாகரீகமான செயல் தொடர்ந்து திட்டமிட்டு நடந்துகொண்டிருக்கின்றது. இதற்குப் பின்னால் சில சக்திகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனைத்தடுத்து சவால்களுக்குமுகங்கொடுக்கின்ற நல்ல கலாசாரம் ஒழுக்கமுள்ள சக்தியுள்ள நேர்மையுள்ள அறிவுள்ள ஆற்றலுள்ளசமுதாயத்தை வளர்தெடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு நமக்கிருக்கின்றது. இதுவிடயத்தில்  ஊடவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள்  ஊடகத்தர்மத்தைப் பேணிச் செயற்படவேண்டும் என்றார்.

Read More

உயிரை தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாத நிலையினை பார்த்து அனுபவித்த மக்கள் நாம்  என்பதை  மறந்து விடக்கூடாது வவுனியாவில் றிப்கான் பதியுதீன் 

கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி தொழிற் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி…

Read More

யாரையும் வீழ்த்துவதற்காக அ.இ.ம. காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தடம்பதிக்கவில்லலை கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

அம்­பாறை மாவட்­டத்தில்  யாரையும் வீழ்த்த வேண்டும் என்­ப­தற்­காக அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்சி தடம் பதிக்­க­வில்லை. இம்­மா­வட்­டத்தில் உள்ள நமது மக்கள் பெற…

Read More

முறைகேடான வர்த்தக  நடவடிக்கையில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள் கைது!!!

கொழும்பு 12 இல் உள்ள  வீடொன்றை சுற்றிவளைத்த நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த பாகிஸ்தான் பிரஜைகள் மூவரை நேற்று…

Read More

நீண்டகால அகதிகளின் பிரச்சினை தீர, மேலுமொரு  அமைச்சரவை பத்திரம்.    இரு வார காலத்தினுள் தரவுகளை கோருகிறார் அமைச்சர் றிஷாட்.

நீண்டகால அகதிகளாக இடம்பெயர்ந்து இன்னும் மீள் குடியேறாது அவதிப்படுபவர்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை   தயாரிக்க இருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்தெரிவித்தார். கிண்ணியாவில் இடம்பெற்ற நிகழ்வென்றில் உரையாற்றிய போது இந்த தகவலை வெளியிட்ட அமைச்சர் ரிஷாட்பதியுதீன், தனது இந்த முயற்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்கா சுதந்திரக்கட்சி, அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளும்  உதவ வேண்டும் எனவும்பகிரங்க வேண்டுகோள் விடுத்தார். மீள் குடியேறாத மக்களின் காணிப்பிரச்சினை, வீ ட்டுப்பிரச்சினை மற்றும்  மலசலகூடப்பிரச்சினை, குறித்த தரவுகளைசேகரித்து பட்டியலிட்டு இரண்டு வார  காலத்தினுள் தருமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.அத்துடன் அரசியல் கட்சிகளின்பிரதிநிதிகள் மாத்திரமின்றி  ஜம்மியத்துல் உலமா உட்பட சமூகம் சார்ந்த சிவில் அமைப்புக்கள்,நிறுவனங்களும் இதற்கு  உதவேண்டும் என அவர்மேலும் கோரினார்.

Read More

இனவாத மதகுருமாரின் செயற்பாடுகளை அரசு கண்டும் காணததுபோல் இன்னும் மெளனம்  காப்பது ஏன்??? கிண்ணியாவில் அமைச்சர் றிஷாட் கேள்வி.

சமுகத்திற்கு பிரச்சினைகளும் ஆபத்துகளும் ஏற்பட்ட பின்னரே, அவசர அவசரமாக கூடி தீர்வை தேடுவதும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதும் என்ற வாடிக்கையை நாம் மாற்றி, நிரந்தரமான பொறிமுறை…

Read More

றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மன்னார்-நானாட்டான் பிரதேசச் செயல பிரிவுகளில் உள்ள 33 அமைப்புக்களுக்கு பொருட்கள் கையளிப்பு!!!

நானாட்டான் பிரதேச கிராம மட்டத்தில் உள்ள 33 அமைப்புக்களுக்கு சுமார் 10 இலச்சம் ரூபாய் பெறுமதியான தளபாடங்கள்  நானாட்டான் பிரதேச செயலகத்தில் வைத்து மக்களுக்கு…

Read More

சிங்கள, முஸ்லிம் கலவரத்தை தூண்டுவதற்கான சதியை சிலர் திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று இந்த நாட்டிலே யுத்தத்திக்குப் பிறகு ஒரு புது வடிவமான பிரச்சினைகள் தோன்றி இருக்கிறது இந்தப் பிரச்சினைகள் எல்லாம் திட்டமிடப்பட்டு முஸ்லிம் சமுதாயத்தை துன்பத்திலும்,துயரத்திலும் ஆக்குவதக்கு…

Read More

முஸ்லிம் மக்களுக்காக பேசுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையின் குரலை நசுக்கிட வேண்டும் என்று எல்லோரும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். -ராஜாங்க அமைச்சர் அமீர் அலி

முஸ்லிம் மக்களுக்காக பேசுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையின் குரலை நசுக்கிட வேண்டும் என்று எல்லோரும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என விவசாய…

Read More

எனது அரசியல் பயணத்திற்கான அர்த்தத்தையும் எமது சமூகத்திற்கு சேவை செய்யக்கூடிய அமைச்சையும் பெற்றுத்தந்தவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன்.- பிரதியமைச்சர் அபத்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவிப்பு…

ஐக்கிய தேசிய கட்சியின் 28 வருடங்கள் எனது அரசியல் காலத்தை வீணடித்த போது இந்த மூன்று வருடங்களில் தான் அரசியலுக்கு அர்த்தத்தையும், சமூகத்திற்கு சேவை…

Read More

மழை இன்மைக்கு வில்பத்து காட்டை அழித்ததுதான் காரணமென சில இனவாதிகள் கூறுவது கவலைக்குரியது அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

நாட்டில் தற்போது மழை இல்லாததற்கு வில்பத்து காட்டினை நான் அழித்தமையே காரணம் என்று சில இனவாதிகள் கூறுகின்றது கவலைக்குறிய விடயம் என கைத்தொழில் வணிக,…

Read More