Breaking
Mon. May 6th, 2024

எதிர்வரும் தேர்தலில் மாகாண சபையை தீர்மானிக்கின்றவர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இருக்கப் போகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃரூப் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை – கிண்ணியா, அஹமட் லேன் உள் ஒழுங்கையில் 45 இலட்சம் ரூபா செலவில் கொங்கீரிட் வீதி, வடிகான் அமைப்புக்கான வேலைத் திட்டத்துக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் பிரதேசமான வெருகல் பிரதேசத்தில் இலங்கை துறை, தர்காமுனை என்ற பகுதியை கடந்த உள்ளூராட்சி மன்ற காலங்களில் வெற்றி பெற்று வந்த TNA கட்சியை தோற்கடித்து, ஸ்ரீகாந் என்ற ஐயரை எங்கள் உறுப்பினராக தெரிவு செய்திருக்கின்றோம்.

அதேபோன்று எமது கட்சியினுடைய தலைவர் 37 தமிழ் உறுப்பினர்களையும், கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருந்து வந்த நான்கு உள்ளூராட்சி மன்ற பிரதேசங்களையும் வெற்றி பெற்றிருக்கின்றோம்.

எங்களுடைய கட்சியின் பெயர் அகில இலங்கை மக்கள் கங்கிரஸ் அது முஸ்லிம் கங்கிரஸோ, தமிழ் கங்கிரஸோ, சிங்கள காங்கிரஸோ அல்ல. சகல சமூகத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தலைமைத்துவ செயற்பாட்டையும் கொண்டிருக்கின்றோம்.

வடக்கும், கிழக்கும் மாகாண சபைகளை இம்முறை தீர்மானிக்கின்ற கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயற்பட  இருக்கின்றது.

இதற்கு இளைஞர்களின் பங்களிப்பை முழுமையாக எதிர்பார்கின்றோம். இந்த தேர்தலில் வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் நாங்கள் தந்த உறுதிமொழியை செய்திருக்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

(ன)

Related Post