மியன்மாரின் சர்ச்சைக்குரிய மதகுருவான விராதுவிற்க்கு ஞாயிற்றுக்கிழமை, நடைபெறவுள்ள பொதுபல சேனாவின் மாநாட்டில் கலந்துகொள்வதற்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து முஸ்லீம் கவுன்சில் கவலை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிaற்க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்ட அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.
மியன்மாரில் முஸ்லீம்களுக்கு பெரும் வன்முறைகளை தூண்டிவிட்ட குறிப்பிட்ட மதகுரு இலங்கை வருவது இலங்கையின் சமாதான சகவாழ்விற்க்கு ஆபத்தாக அமையும் என குறிப்பிட்ட கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இஸ்லாமின் வளர்ச்சி பௌத்தத்திற்க்கும் மியன்மார் கலாச்சாரத்திற்க்கும் ஆபத்தான விடயம் என்ற தீவிர பிரச்சாரம் மூலமாக அந்த நாட்டின் முஸ்லீம் சிறுபான்மையினரின் மீது வன்முறைகளை தூண்டிவிட்டவர் விராது என சர்வதேச அளவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அவரது பிரசன்னம் முஸ்லீம்களுக்கு எதிராக மேலும் வன்முறைகளை தூண்டலாம், அளுத்தகமவில் ஞானசாராதேரரின் உரை ஏற்படுத்திய விளைவுகளை இது ஏற்படுத்தலாம்.
குறிப்பிட்ட தேரரிற்க்கு விசா வழங்கப்பட்டால் இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பிரச்சாரத்திற்க்கு இலங்கை அரசாங்கத்திற்க்கு தொடர்பிருப்பதாக மேலும் குற்றச்சாட்டு எழலாம் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.