Breaking
Mon. Apr 29th, 2024

முசலிப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட, காயக்குளி சிங்கள கம்மான விகாரையின் பொறுப்பாளரான விகாராதிபதி, அந்த மக்களின் நீண்டகால பிரச்சினையான பாதைகள் இன்னும் சில முக்கிய பிரசினைகள் தொடர்பாக முசலிப் பிரதேச சபை தவிசாளருடன் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில், கலந்துகொண்ட முசலிப்  பிரதேச சபை தவிசாளர் சுபியான், இந்த மக்களின் பிரச்சினைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருடன் பேசி விரைவில் தீர்த்து தருவதாகவும் வாக்குறுதி வழங்கினார்.

விகாராதிபதியுடனான சந்திப்பில் மிகவும் பயனுள்ள நல்லபல விடயங்கள் பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.  இந்த நிகழ்வில் ஊர் பிரமுகர்கள் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

(ஐ)

Related Post