Breaking
Mon. Apr 29th, 2024

-ஐ.ஏ.ஸிறாஜ் –
அம்­பாறை மாவட்­டத்தில் காணி­களை இழந்­த­வர்­களின் சிவில் சமூக அமைப்­பான காணி உரி­மைக்­கான அம்­பாறை மாவட்ட செய­ல­ணி­யா­னது பேரி­ன­வாத செயற்­பா­டு­க­ளினால் திட்­ட­மிட்டு ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள சிறு­பான்மை முஸ்லிம் மற்றும் தமிழ் மக்­க­ளது காணி­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரியும் அது தொடர்­பான ஆவ­ணங்­களை கைய­ளிக்கும் நோக்­கிலும் கொழும்பில் முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யது.

இதன் ஓர் அங்­க­மாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஆர்.ஆர்.ரி. ஆகிய அமைப்­பு­க­ளு­ட­னான சந்­திப்பு சனிக்கிழமை மாலை கொழும்பில் நடை­பெற்­றது.

இச்­சந்­திப்பின் போது  முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைரும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலை­வ­ரு­மான என்.எம்.அமீன் தலை­மை­யி­லான குழு­வி­ன­ரிடம் அம்­பாறை மாவட்­டத்தில் தற்­போது காணப்­படும் எட்டுக் காணிப் பிரச்­சி­னைகள் பற்­றிய ஆவ­ணங்­களும் அதன் மூல­மாக பாதிப்­புக்­குள்­ளா­னோரின் கோரிக்­கை­களும் அடங்­கிய விரி­வான அறிக்கை ஒன்று கைய­ளிக்­கப்­பட்­டது. அத்­துடன் பாதிப்­புக்­குள்­ளானோர் எதிர்நோக்கும் பிரச்­சி­னைகள் குறித்து காணி உரி­மைக்­கான அம்­பாரை மாவட்ட செய­ல­ணி­யினர் தெளி­வு­ப­டுத்­தினர்.

இதில் கலந்துகொண்ட செய­ல­ணியின் பிர­தி­நி­திகள் கருத்து வெளி­யி­டு­கையில், வழங்­கப்­பட்ட அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள எட்டுக் காணிப் பிரச்­சி­னை­க­ளான பொத்­துவில் மற்றும் லாகு­கல எல்லைப் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள வேகாமம், கிரான்­கோவை மற்றும் கிரான்­கோ­மாரி காணிப் பிரச்­சி­னைகள் வனப்­பா­து­காப்பு பிர­தே­சத்­திற்கு உட்­பட்­டி­ருப்­ப­தாக புதி­தாக தடைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அட்­டா­ளைச்­சேனை பிர­தே­சத்தில் உள்ள ஒலுவில் பொன்­னன்­வெளி மற்றும் அஷ்ரப் நகர் காணிப் பிரச்­சி­னைகள். இக்­கா­ணி­களில் எந்த முறை­மை­களும் பின்­பற்­றப்­ப­டாமல் இரா­ணு­வத்­தினர் சிறிய முகாம் ஒன்­றினை அமைத்­துள்­ள­துடன் வனம், தொல்­பொருள், தீக­வாபி புனித பூமி என பல கார­ணங்கள் கூறப்­பட்டும் காணி­களை ஆக்­கி­ர­மித்து பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளுக்கு பிரித்துக் கொடுக்­கப்­பட்­டுள்­ளன.

ஆலை­ய­டி­வேம்பு பிர­தே­சத்தில் உள்ள கீத்­துப்­பத்து “பாவா புரம்” காணிப் பிரச்­சி­னை­யா­னது கல்­ஓயா அபி­வி­ருத்­தியின் கீழ் குடியேற்­றப்­பட்ட 18, 19 ஆம் கொலனி குடி­யேற்றத் திட்­டங்­களில் குடியேறி­ய­வர்­க­ளினால் அடா­வ­டித்­த­ன­மாக அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. தமணை பிர­தே­சத்தில் உள்ள அம்­பலம் ஓயா காணிப் பிரச்­சி­னை­யா­னது கல்­லோயா அபி­வி­ருத்தித் திட்­டத்­தின்கீழ் பெரும்­பான்மை சமூ­கத்­த­வர்­களை திட்­ட­மிட்டுக் குடி­யேற்­று­வ­தற்­காக பறிக்­கப்­பட்ட முஸ்­லிம்­களின் பாரம்­ப­ரியக் காணி­க­ளாகும்.

மற்றும் அக்­க­ரைப்­பற்று பிர­தே­சத்தில் உள்ள சுனா­மி­யினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக சவூதி அர­சாங்­கத்­தினால் நிர்­மா­ணிக்­கப்­பட்ட நுரைச்­சோலை வீட்­டுத்­திட்டம் இன­வா­தத்தின் கார­ண­மாக பத்து வரு­டங்­க­ளுக்கு மேலா­கியும்  பகிர்ந்­த­ளிக்க முடி­யாத நிலையில் காடாகிக் காணப்­ப­டு­கின்­றது.

இக் காணிப் பிரச்­சி­னைகள் அனைத்­திலும் 1200 இற்கும் அதி­க­மான ஏழைக் குடும்­பங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன், அவர்­களின் வாழ்­வா­தா­ரமும் பல­வ­ரு­டங்­க­ளாக கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது.

ஆகவே, கடந்த ஆட்­சி­யா­ளர்­களின் ஆட்­சிக்­கா­லங்­களில் உரு­வாக்­கப்­பட்ட இவ்­வா­றான பிரச்­சி­னைகள் அனைத்தும் இலங்கை நாட்டில் உள்ள இனங்­க­ளி­டையே பிரி­வி­னை­யி­னையும், இனக் குரோ­தங்­க­ளை­யுமே உரு­வாக்­கி­யுள்­ளன. இவை அனைத்தும் நியா­ய­மான முறையில் தீர்க்­கப்­ப­ட­வேண்டும்.

அதன் மூலமே தேசிய நல்­லி­ணக்­கமும் நல்­லாட்­சியும் மலர வேண்டும் எனும் நம்­பிக்­கை­யில்தான் சிறு­பான்மை மக்கள் இப்­போ­துள்ள ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளித்­தார்கள். அந்த நம்­பிக்­கை­யினை பாழாக்கி வெறும் கையுடன் அனுப்பும் வேலை­க­ளையோ அல்­லது கடந்த ஆட்­சி­யா­ளர்கள் போல் பார­பட்சம் காட்டி வன்­மு­றைக்கு தீனி போடும் செயற்­பா­டு­க­ளையோ இந்த நல்­லாட்சி மேற்­கொள்­ளாது என்­பதில் இன்னும் எமக்கு நம்­பிக்கை உள்­ளது. புதிய அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பாக சிறு­பான்­மை­யி­னத்தின் காணி­களைப் பாது­காப்­ப­தற்­கான கொள்­கைகள் வகுக்­கப்­படல் வேண்டும் எனவும் இச்­சந்­திப்பில் கலந்து கொண்­ட­வர்கள் தெரி­வித்­தனர்.

இச்சந்­திப்பில் காணி உரி­மைக்­கான அம்­பாரை மாவட்ட செய­ல­ணியின் தலைவர் கே.எல்.கைறுதீன், இணைப்­பாளர் கே. நிஹால் அஹமட் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின்  முன்னாள் தேசிய தலைவர் எம்.ஐ. உது­மா­லெப்பை, சட்­டத்­த­ரணி எஸ்.எச்.எம்.மனா­றுதீன் மற்றும் பாதிக்­கப்­பட்­டுள்ள காணி உரி­மை­யா­ளர்கள், காணி உரி­மைக்­கான அம்­பாறை மாவட்ட செய­ல­னியின் பிர­தி­நி­திகள் ஆகி­யோரும் கலந்து கொண்­டனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் சார்பில் அதன் தலைவர் என்.எம்.அமீன், செய­லாளர் அஷ்கர்கான், உறுப்­பினர் நியாஸ் ஆகி­யோரும் ஆர்.ஆர்.ரி. அமைப்பின் சார்பில் அதன் தலைவர் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன், சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் ஆகி­யோரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சார்பில் அதன் பொதுச் செய­லாளர் சாதிக் சிஹான், நிரு­வாக சபை உறுப்­பினர் எம்.பி.எம்.பைறூஸ் ஆகி­யோரும் கலந்து கொண்­டனர்.

இதன்­போது முஸ்லிம் கவுன்சில் மற்றும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலை­வ­ரான என்.எம்.அமீன்  கருத்­து தெரி­விக்­கையில், அம்­பாறை மாவட்­டத்தில் எத்­த­னையோ முஸ்லிம் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் இருந்தும் இப்­பி­ரச்­சி­னைகள் அனைத்தும் நீண்ட கால­மாக தீர்க்­கப்­ப­டாது காணப்­ப­டு­கின்­றன. இதனை எண்ணி மன­வே­தனை அடை­கின்றேன்.

இப் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட்­டாலே அம்­பாறை மாவட்­டத்தில் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் சாத்­தி­ய­மாகும். இப்­பி­ரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­காக பொறுப்­பா­ன­வர்­களை ஒன்­றி­ணைத்து நட­வ­டிக்­கைகள் எடுக்க முயற்சி எடுப்பதுடன் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் சந்திப்பொன்றினை ஏற்படுத்தி  விரைவாகத் தீர்வினைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.

அத்துடன் இந்தக் காணி விவகாரங்களை சட்ட ரீதியாக எதிர்கொண்டு பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு நீதியை நிலைநாட்ட தமது ஆர்.ஆர்.ரி. அமைப்பு தயாராகவுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் உறுதியளித்தார். இதற்குத் தேவையான ஆவணங்களை தம்மிடம் ஒப்படைக்குமாறும் அவர்  காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணி உறுப்பினர்களிடம் வேண்டுகோள்விடுத்தார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *