Breaking
Wed. May 8th, 2024

கொழும்பு நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநயாகத்தை முற்றுமுழுதாக அழித்து விடவே ஜனாதிபதி மஹிந்த மூன்றாம் தவணைக்காக போட்டியிடுகின்றார்.

ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நான் ஜனாதிபதியாவது நிச்சயம்.

சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்தேன்.

எனக்கு மட்டுமல்ல இந்த அனுபவம் என்னுடன் வெளியேறிய அமைச்சர் ராஜித சேனாரட்ன உள்ளிட்டவர்கள் மற்றும்அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களுக்கும் இதே நிலைமையே காணப்படுகின்றது.

நாட்டில் இலவச சுகாதார சேவை, இலவசக் கல்வி என்பன முடக்கப்பட்டுள்ளன.

நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பு சுயாதீனமாக இயங்குகின்றதா? பொலிஸார் சுயாதீனமாக இயங்குகின்றார்களா? ஊடக சுதந்திரம் காணப்படுகின்றதா?

நீண்ட காலமாக அரசியலில் ஈடுபட்டு வருகின்ற காரணத்தினால் அரசியல் சேறு பூசல்களுக்கு பழகி விட்டோம்.

நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *