Breaking
Mon. May 20th, 2024

சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு பிணை வழங்கும் செயற்­பாட்­டுக்கு சட்­டமா அதிபர் திணைக்­களம் எதிர்ப்புத் தெரி­விக்கக் கூடாது என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார். அந்த வகையில் இன்று முதல் தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு பிணை வழங்கும் செயற்­பாடு இடம்­பெறும் என்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி தமிழ் அர­சியல் கைதிகள் மீண்டும் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். இந்­த­நி­லையில் இவ்­வி­டயம் குறித்து தேசிய கலந்­து­ரை­யா­டல்கள் அமைச்சர் மனோ கணேசன் நேற்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தொடர்­பு­கொண்டு வின­வி­யுள்ளார். இதன்­போதே இன்று முதல் பிணை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என்றும் கைதி­களின் பிணை கோரிக்­கைக்கு சட்­டமா அதிபர் திணைக்­களம் எதிர்ப்பு தெரி­விக்கக் கூடாது எனவும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க
தெரி­வித்­துள்ளார்.

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கடந்த வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற கூட்­டத்­தின்­போது கைதி­களில் 32பேரை நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை பிணையில் விடு­விப்­பது என்றும் ஏனைய 30 பேரை எதிர்­வரும் 20ஆம் திக­திக்கு முன்னர் பிணையில் விடு­விப்­பது எனவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இத­னை­விட குற்­றங்கள் நிரூ­பிக்­கப்­பட்ட கைதிகள் தொடர்பில் விசேட அமைச்­ச­ரவை உப­கு­ழுவை நிய­மித்து நட­வ­டிக்­கை­களை எடுப்­பது எனவும் முடி­வு­செய்­யப்­பட்­டி­ருந்­தது.

ஆனாலும் கடந்த திங்­கட்­கி­ழமை 32 அர­சி­யல்­கை­திகள் பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. இதனால் கைதி­களின் பெற்­றோர்கள் மற்றும் உற­வி­னர்கள் பெரும் கவலை அடைந்­தனர். இந்த நிலை­யி­லேயே இன்று முதல் கைதி­க­ளுக்கு பிணை வழங்­கப்­படும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­வித்­தி­ருக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இதேவேளை தமிழ் அர­சியல் கைதி­களில் முதற்­கட்­ட­மாக 31பேரை பிணை வழங்கி விடு­தலை செய்­வ­தற்­கான செயற்­பா­டுகள் இன்று முதல் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக சிறைச்­சா­லைகள் ஆணை­யாளர் நாயகம் ரோஹண புஷ்­ப­கு­மார தெரி­வித்தார்.

தமிழ் அர­சியல் கைதி­களில் புனர்­வாழ்வு பெறு­வ­தற்­காக முகாம்­க­ளுக்குச் செல்லத் தயா­ராக இருப்­ப­வர்கள் தமது விருப்பம் தொடர்பில் சிறைச்­சாலை பொறுப்­ப­தி­கா­ரிகள் ஊடாக எமக்கு அறி­விக்க முடி­யு­மெ­னவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். அவ­ச­ர­காலச் சட்டம், பயங்­க­ர­வாதச் சட்­டத்தின் கீழ் 14 சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதிகள் தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் மீண்டும் தமது சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை ஆரம்­பித்­துள்­ளனர்.

இந்­நி­லையில் சிறைச்­சா­லையின் தற்­போ­தைய நிலை­மைகள்இ கைதிகள் தொடர்­பாக எவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என வின­வி­ய­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தமிழ் அர­சியல் கைதிகள் தமது உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை தொடர்ந்­த­வண்­ண­முள்­ளனர். அவர்கள் அமை­தி­யாக தமது போராட்­டத்தை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றனர். உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் கைதி­களின் நிலை­மைகள் தொடர்பில் சிறைச்­சாலை வைத்­தி­ய­சாலை பிரி­வினர் விசேட கவ­ன­மெ­டுத்­துள்­ளனர். பாதிப்­புக்கள் ஏற்­படும் பட்­சத்தில் அவர்­க­ளுக்­கு­ரிய சிகிச்­சை­களை வழங்­கு­வ­தற்­கு­ரிய பூரண ஏற்­பா­டு­களும் செய்­யப்­பட்­டுள்­ளன.

தற்­போது வெலிக்­க­டையில் 93பேரும்இ போகம்­ப­ரையில் 12பேரும்இ மட்­டக்­க­ளப்பில் 10பேரும் அநு­ரா­த­பு­ரத்தில் 29பேரு­மாக 144பேர் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.
நேற்று முன்­தினம் மாலையில் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் சொலிசிட்டர் ஜெனரல் சுகத கம்லத்தும் நானும் வெலிக்­கடைச் சிறைச்­சா­லைக்குச் சென்­றி­ருந்தோம். உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் கைதி­களின் நிலை­மைகள் தொடர்­பாக ஆராய்ந்­தி­ருந்தோம்.

இந்­நி­லையில் நாளை முதல் (இன்று) முதல் முதற்­கட்­ட­மாக 31பேருக்கு பிணை வழங்கி விடு­தலை செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. அதனைத் தொடர்ந்து ஏனைய 32பேருக்­கான விடு­தலை தொடர்பில் நட­வ­டிக்­கை­களை சட்­டமா அதிபர் திணைக்­களம் எடுக்­க­வுள்­ளது.

அதே­நேரம் 48பேர் தண்­ட­னை­ய­ளிக்­கப்­பட்­ட­வர்­க­ளா­க உள்ளனர். 116பேர் மீது கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 10பேர் தமக்கு அளிக்கப்பட்ட தண்டனை தொடர்பில் மேன்முறையீடுகளை செய்துள்ளவர்களாகவும் உள்ளனர். இவர்களை தவிர ஏனையோரை எவ்வாறு விடுவிப்பது என்பது தொடர்பாக அவர்களின் கோப்புக்கள் ஆராயப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

மேலும் தமிழ் அரசியல் கைதிகளில் புனர்வாழ்வு பெறுவதற்கு விரும்புவோர் தமது விபரங்களை சிறைச்சாலை பொறுப்பதிகாரிகள் ஊடாக எமக்கு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளனர் என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *