Breaking
Sun. May 19th, 2024

அளுத்­கம சம்­ப­வத்­தினால் முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்ட விப­ரீ­தங்­களுக்கு முன்னாள் ஆட்­சி­யா­ளரும் அவ­ரது குடும்­பத்­தி­னரும் நெருங்­கிய கார­ண­கர்த்­தாக்­க­ளாக இருந்­துள்­ளனர் என்­பதை அதில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களே வெளிச்­சத்­திற்குக் கொண்டு வந்­துள்­ளனர் என்று தேசிய ஐக்­கிய அமைப்பின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம். எம். சுஹைர் தெரி­வித்தார்.

கொழும்பு – 12, வாழைத்­தோட்­டத்தில் அமைந்­துள்ள சுவர்க்­கத்து மலர்கள் பாலர் பாட­சா­லையின் 30 ஆவது வருடப் பரி­ச­ளிப்பு விழா மரு­தானை டவர் மண்­ட­பத்தில் அண்­மையில் நடை­பெற்­றது. இவ்­வை­ப­வத்தில் பிர­த­ம­ அ­தி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இவ்­வை­ப­வத்தில் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

கடந்த ஆட்சிக் காலத்தில் இந்­நாட்டு முஸ்லிம் சமூகம் பல­வி­த­மான நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுத்து துன்­பு­றுத்­தப்­பட்டு கேவ­லப்­ப­டுத்­தப்­பட்­டது.

இவ்­வா­றான நிலையில் முஸ்லிம்கள் அழுது தொழுது கேட்ட பிரார்த்­த­னை­க­ளி­னதும் கட்சி வேறு­பா­டு­க­ளுக்கு அப்பால் ஒன்­று­பட்டு ஆத­ரவு நல்­கி­யதன் பய­னா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை எம்மால் வெற்றி பெறச் செய்ய முடிந்­தது. அவ­ரது வெற்­றியை நாம் தொடர்ந்தும் பாது­காக்க வேண்டும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஏற்­பட்ட அளுத்­கம சம்­ப­வத்தில் முன்னாள் ஆட்­சி­யா­ளரும் அவ­ரது குடும்­பத்­தி­னரும் சம்­பந்­தப்­பட்டு இருந்­தனர் என்பதை அதனோடு அதில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் ஊடா­கவே வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளது.
அதனால் முஸ்­லிம்­களும் முஸ்லிம் தலை­வர்­களும் சமூ­கத்தின் நலன்­களைக் கருத்தில் கொண்டு ஒன்­று­பட்டு செயற்­பட வேண்டும். இது காலத்தின் அவ­சியத் தேவை. அதே­நேரம் நாம் இன மத ரீதி­யாகத் தொடர்ந்தும் பிரிந்து வாழ்ந்தால் பல கஷ்­டங்­களை எதிர்­நோக்க வேண்­டி­வரும்.

அதனால் இன்­றைய சூழ்­நி­லையில் சமூ­கங்­க­ளுக்­கி­டையே ஒற்­றுமை மிக அவ­சி­ய­மா­னது. அது நாட்டின் சுபீட்­சத்­திற்கு மிக அவ­சியம்

இப்­பாலர் பாட­சா­லையில் கல்வி கற்ற பின்பு பலர் முன்­னணிப் பாட­சா­லை­களில் உயர்­கல்வி கற்றுக் கொண்டு இருக்­கின்­றனர். சமூ­கத்தில் முன் மாதி­ரி­யான பிர­ஜை­க­ளா­கவும் திக­ழு­கின்­றனர்.

இவர்­களில் தற்­போது வேறு பாட­சா­லை­களில் கற்கும் மாண­வர்­களில் சிலர் இப்­பா­ட­சா­லையின் பழைய மாண­வர்கள் என்­ற­வ­கையில் இங்கு பல்­வேறு நிகழ்ச்­சி­களை மிகவும் திற­மை­யாக அரங்­கேற்­றி­னார்கள். அவர்­களின் எதிர்­கா­லத்­திற்கு எமது நல்­வாழ்த்­துக்கள்.

இன்­றைய சிறார்கள் தான் நாளையத் தலை­வர்கள் எனக் கூறு­வதைக் கேட்­டி­ருக்­கின்றோம். இப்­ப­டி­யான சிறார்கள் நாட்டின் சிறந்த பிர­ஜை­க­ளாக உரு­வாக்­கப்­பட வேண்டும். அவர்கள் நாட்­டுக்கும் சமூ­கத்­திற்கும் நன்மை பயக்கக் கூடி­ய­வர்­க­ளா­கவும் ஒழுக்க சீலர்­க­ளா­கவும் விளங்க வேண்டும்.

ஆகவே, இச்­சி­றார்­களின் பிஞ்சு உள்­ளங்­களில் நல்ல விட­யங்­களே விதைக்கப் பட வேண்டும். அதற்­காக சிறார்­களின் கல்வி மேம்­பாட்டில் ஆசி­ரி­யர்கள் மாத்­தி­ர­மல்­லாமல் பெற்­றோரும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இப்­பாலர் பாட­சா­லையை உரு­வாக்கி அதனை சிறப்­பான முறையில் முன்­னெ­டுப்­ப­தற்கு வாழைத்­தோட்டம் இஸ்­லா­மிய நலன்­புரிச் சங்­கத்­தினர் அளப்­ப­ரிய பங்­க­ளிப்­புக்­களை நல்­கி­யுள்­ளனர். அவர்­க­ளது பங்­க­ளிப்­புக்கள் என்றும் பாராட்­டப்­பட வேண்­டி­ய­வையே.

இப்­பாலர் பாட­சா­லைக்கு பங்­க­ளிப்­புக்­களை நல்­கி­ய­வர்­களில் எனது நெருங்­கிய நண்­பரும், சிரேஷ்ட எழுத்­தா­ள­ரு­மான எஸ் ஐ. நாகூர்­கனி குறிப்­பி­டத்­தக்­க­வ­ராவார். அவ­ரது பணிகளைப் பாராட்டி அவருக்கு இங்கு கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. இது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றது என்றார்.

இவ்வைபவத்தில் சிரேஷ்ட எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி, ரசூல் ஏ. ரஹீம். ஏ. எல். எம். லத்தீப். எம். லியாகத் அலி, ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். அத்தோடு பாலர் பாடசாலை அதிபர் நிஹாரா நஸார் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *