Breaking
Sun. Apr 28th, 2024

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா தலைமையில், புத்தளம், ஆலங்குடா, மசூர் நகர் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று நேற்று (12) இடம்பெற்றது.

இச் சந்திப்பில் பிரதேச சபை உறுப்பினர் அக்மல் மற்றும் மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச முக்கியஸ்தர் தௌபீக் உட்பட ஊர் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, ஆண்டான்கனி பகுதிக்கும் நேற்று விஜயம் செய்த  முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா, அங்குள்ள முக்கியஸ்தர்களையும் சந்தித்து, பொதுத்தேர்தல் தொடர்பில் கலந்துரையாடினார்.

Related Post