Breaking
Fri. May 10th, 2024

-ஊடகப்பிரிவு-

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக, பாலமுனை மின்ஹாஜ் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றிபெற வைக்கும் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை (24) சின்னப் பாலமுனை காரியாலயத்தில் இடம்பெற்றது.

பாலமுனை வட்டார முதன்மை வேட்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், கட்சியின் அரசியல் நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பன பற்றி சின்னப்பாலமுனை இளைஞர்களை தெளிவுபடுத்தும் ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

 

 

 

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *