Breaking
Fri. May 3rd, 2024

இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இது தொடர்பிலான சட்ட மூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நேற்று இது தொடர்பிலான யோசனைத் திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இந்த உத்தேச சட்டத்தை சமர்ப்பித்துள்ளார். இன மற்றும் மத ரீதியில் குரோதத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிடும் தரப்பினருக்கு குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் சட்டம் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சட்டத்தை முன்னதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அமைச்சரவையில் சமர்ப்பித்த போதிலும் அதற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *