Breaking
Sat. Apr 27th, 2024

ASHRAFF SAMAD

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இரு நாட்கள் மாவட்டச் செயலாளர்களது மீளாய்வுச் செயலமர்வு ஒன்றை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு நேற்று கொழும்பில் ஆரம்;பதித்து வைக்கபட்டது.

இச் செயலமர்வு நேற்றும் இன்றும் இரு நாட்கள் நாட்டில் உள்ள சகல மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொள்கின்றனர். இன்று இச் செயல்மர்வினை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜேசப் மைக்கல் பெரேரா தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் 100 நாள் ;வேலைத்திட்டங்கள் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள மீளாய்வு முன்னேற்றங்கள் பற்றியும் அமைச்சின் செயலாளர் பொரலஸ்ச தலைமையில் கலந்துரையாடப்பட்டு வருகின்றன.

சகல மாவட்டச் செயலகத்திற்கு மேலும் குறை நிறையில் உள்ள சிறு திட்டங்களுக்காக உள்நாட்டு அமைச்சர் ஜேசப் மைக்கள் பெரேராவினால் ருபா 8 பில்லியண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு அமைசச்ர் தெரவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *