Breaking
Wed. May 1st, 2024
– எம்.ஆர்.எம்.வ­ஸீம் –
துரு­க்­கியில் ஜன­நா­யக ஆட்­சியை பாது­காத்­துக்­கொள்­வ­தற்கு துருக்­கி ஜனா­தி­பதி மற்றும் பிர­­த­மர் உட்­பட அந்த நாட்டு அர­சாங்­கத்­­துக்கு முடி­யு­மா­கியது மகிழ்ச்­சி­ய­ளிக்­கி­றது என பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­துள்­ளார்.
துருக்­கியில் இரா­ணுவ புரட்­சி­யொ­ன்றின் மூலம் அர­சாங்­கத்தை கைப்­பற்­றி­யுள்­ள­தாக அந்­நாட்டு இரா­ணுவம் வெள்ளிக்­கி­ழமை இர­வு அறி­வித்­தி­ருந்­தது. இந்­நி­லையில் பொது மக்கள் ஒன்று திரண்டு இரா­ணுவத்தின் புரட்­சிக்­கு எதி­ராக செயற்­பட்டு இரா­ணுவ தாங்­கி­களை மறித்தும் கற்­களை வீசித்­தாக்­கியும் உள்­ளனர். இதனால் இரா­ணு­வத்­தி­னர் தங்கள் புரட்­சியை தொடர்ந்து கொண்­டு­செல்ல முடி­யாது சர­ண­டைந்­துள்­ள­னர்.
அத்துடன் துருக்­கியில் இடம்­பெற்ற இரா­ணுவ புரட்சி மக்­களின் ஆத­ர­வுடன் முறி­ய­டிக்­கப்­பட்­ட­தாக அந்­நாட்டு ஜனா­தி­பதி பகி­ரங்­க­மாக அறி­விப்பு செய்­­திருந்­தார்.
இந்­நி­லை­யி­லேயே பிர­த­ம­ர் ரணில் விக்­ர­ம­சிங்க துருக்கி ஜனாதி­பதி மற்றும் பிர­த­மர் உள்­ளிட்ட அர­சாங்­கத்­துக்கு மகி­ழ்ச்சி தெரி­வித்து விடுத்­துள்ள அறிக்­கை­யிலேயே இவ்­வா­­று தெரி­வித்­துள்­ளார்.
அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வ­து,
துருக்­கியில் இரா­ணு­வ புரட்­சி­யொன்றின் மூலம் ஜன­­நா­யக நிர்­வாகம் ஒன்­றை அடி­ப­ணி­ய வைப்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட முய­ற்சி தோற்­க­டிக்­கப்­பட்­ட­மை­யா­னது ஜன­நா­ய­கத்தை மதிக்கும் உலக மக்­க­ளின் மகிழ்ச்­சிக்கு கார­ண­மா­கின்­றது.
இந்த இக்­கட்­டான நிலையில் இலங்­கை­யி­னதும் இலங்­கைவாழ் மக்­க­ளி­னதும் ஆ­தரவு துருக்கி நாட்­டுக்கு கிடைக்கும் என அவர் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *