Breaking
Fri. May 17th, 2024

இலங்கையின் முதலாவது சபாரி பூங்கா இன்று அம்பாந்தோட்டை, ரிதிகம பிரதேசத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த சபாரி விலங்கியல் பூங்காவை நிர்மாணிப்பதற்காக 2008 ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டதுடன் 2 ஆயிரத்து 600 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டு, பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

500 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இச்சபாரி பூங்காவில்  சிங்கவலயம், உலக விலங்கு வலயம் மற்றும் ஆசிய யானைகள் வலயம் என மூன்று வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

இப்பூங்காவில் 22 வகையான 200 இற்கும் மேற்பட்ட விலங்குகளை காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *