Breaking
Mon. May 13th, 2024

இலங்கை அரசாங்கமும் சீன அரசாங்கமும் கூட்டு குழு ஒன்றை அமைக்க இணங்கியுள்ளன.

இந்த கூட்டு குழு தொடர்பான பிரதமரும், சீனத்தூதுவரும் அண்மையில் ஹம்பாந்தோட்டைக்கு சென்று திரும்பிய பின்னர் குறித்த இணக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது சீனத்தூதுவரும் இலங்கையின் பிரதமரும் விரிவான பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

இதில் குறித்த பிரதேசத்தில் கைத்தொழில் துறைக்கான நிலத்தை ஒதுக்குவது தொடர்பான பேச்சுகளும் இடம்பெற்றதாக சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *