Breaking
Mon. May 20th, 2024

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடல் மார்க்கமாக தனது உறவினர்களை பார்ப்பதற்காக இலங்கை வர முற்பட்ட நபர் ஒருவரை தமிழக பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த நடராஜன் (55) ஆவார்.

குறித்த நபர் கடந்த 2011 ஆம் ஆண்டில் தமிழகம் சென்று, வெளிப்பதிவு அகதியாக விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தங்கியிருந்ததோடு, கூலித் தொழில் செய்து வந்தார் என தமிழன ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

மீனவர்களின் தகவலின்படி தனுஷ்கோடி பொலிஸார், நடராஜனை பிடித்து மேலதிக விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *