Breaking
Sun. Apr 28th, 2024

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பு இறைவனால் வழங்கப்பட்ட திருக்குர்ஆன் அன்று என்ன பேசியதோ அவையனைத்தும் இன்று உலகில் நடப்பதை பல ஆண்டுகளாக உலகமே வியந்து வருகிறது.

அப்படிப்பட்ட வியப்புகளில் இதுவும் ஒன்று…. அல்லாஹ் தன்னுடைய திருமறை திருக்குர்ஆனில் கூறுகிறான்…
“பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. நான் இதற்கு
முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா ? என்று அவர் கூறினார்.
கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றைஏற்படுத்தியுள்ளான் என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.” (திருக்குர்ஆன் 19:23.24)என்று திருக்குர்ஆன் பேசுகிறது.

திருக்குர்ஆனின் அந்த வசனத்திற்கும் கீழே உள்ள செய்தியையும் பாருங்கள். பிரசவ வலியில் துடிப்பதற்கும், கீழே நீரூற்றை ஏற்படுத்துவதற்கும் என்ன தொடர்பு ? தொடர்பு இருப்பதை இன்றைய அறிவியல் உலகம் கண்டு பிடித்து, குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதை மேலும் மெய்பித்திருக்கிறது.

பிரசவம்நடைபெறும் லேபர் வார்டில் கணவனை அனுமதிப்பது தற்போது இலங்கை இந்திய ஆகிய நாடுகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. பிரசவமாகும் பெண்ணுக்கு இது மனதளவில் தைரியத்தை தரும் எனநம்பப்படுகிறது.

ரஷ்யாவில் பிரசவத்தை நீருக்குள் வைத்துக் கொள்ளும் முறை நடைமுறையில் உள்ளது. நீருக்குள் பிரசவம் நடைபெறுவது தாய்க்கு பிரசவத்தை எளிதாக்குகிறது என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தை வயிற்றில் கருப்பையில் நீருக்குள் மிதந்தபடி தான் உள்ளது.எனவே நீருக்குள் பிரசவம் நடைபெறும்போது குழந்தை தனக்கு பழக்கப்பட்ட நிலையிலேயே வெளியே வருகிறது. எனவே குழந்தைக்கும் இது இயல்பானதாக உள்ளது.

குளிர் நீரில் பிறப்பதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்புத்திறன்கூடுகிறது. ரஷ்யாவில் பிரசவ மருத்துவமனைகளில் பிரசவத்துக்கென சிறப்பு நீச்சல் குளங்கள் நீருடன் தயார் நிலையில் உள்ளன.
subhannallah

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *