Breaking
Sat. May 4th, 2024

பாரா­ளு­மன்­றத்தை கலைத்து தேர்­தலை நடத்­து­வ­தற்கே எதிர்க்­கட்­சிகள் முயற்­சிக்­கின்­றன. அவ்­வா­றாயின் எதிர்க்­கட்­சிக்கு முடி­யு­மாக இருந்தால் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தை கலைத்துக் காட்­டு­மாறு நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க சவால் விடுத்தார்.

இந்த பாரா­ளு­மன்­றத்­தினால் நீண்ட காலம் பய­ணிக்க முடி­யாது. நிரந்­த­ரமான அர­சாங்­க­மொன்றை நிறு­வு­வ­தற்கு புதிய பாரா­ளு­மன்றம் உரு­வாக்­கப்­பட வேண்டும். அத­னூ­டாக திரு­டர்­களின் உண்­மைகள் வெளிவரும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

எமக்கு ஆட்­சியை ஒப்­ப­டை­யுங்கள். பாரா­ளு­மன்­றத்தை நாம் கலைத்துக் காட்­டுவோம் என்று தினேஷ் குண­வர்­தன எம்.பி.விடுத்த சவால் தொடர்பில் வின­விய போதே
அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

சிறுப்­பான்மை பிர­தி­நி­தித்­து­வத்தை கொண்ட ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஆட்சி அமைக்க அர­சி­ய­ல­மைப்பில் இட­மில்லை. ஆகவே ஆட்­சிப்­பீ­டத்தை எமக்கு வழங்­கினால் நாம் பாரா­ளு­மன்­றத்தை கலைத்து காட்­டுவோம் என முன்னாள் அமைச்சர் தினேஷ் குண­வர்­தன சவால் விடுத்­தி­ருந்தார். அத்­தோடு இது தொடர்பில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் செய­லாளர் சுசில் பிரே­ம­ஜ­யந்த ஜனா­தி­ப­திக்கு கடி­தமும் அனுப்­பி­யுள்ளார்.

பாரா­ளு­மன்­றத்தை கலைக்க வேண்டும் என்ற ஒரே நோக்­கத்­து­டனே இவ்­வாறு எதிர்க்­கட்­சிகள் செயற்படுகின்றன. எதிர்க்­கட்­சி­களின் இத்­த­கைய செயற்­பா­டு­க­ளினால் எம்மை அச்­சு­றுத்த முடி­யாது. எதிர்க்­கட்­சி­க­ளுக்கு பாரா­ளு­மன்­றத்தை கலைத்­து­விட்டு ஆட்­சியை பிடிப்­பதே பிர­தான குறிக்­கோ­ளாக இருப்பின் தினேஷ் குண­வர்­த­ன­வினால் விடுக்­கப்­பட்ட சவா­லுக்கு அமை­வாக முடி­யு­மனால் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தை கலைத்து காட்­டுங்கள்.

அவ்­வாறு கலைப்­ப­தி­னூ­டாக நிரந்­த­ர­மான ஆட்­சியை நாட்டு மக்­களால் உரு­வாக்க முடியும். அத­னூ­டாக மக்­களின் உடை­மை­களை சூரை­யா­டிய திரு­டர்கள் வௌிச்­சத்­துக்கு கொண்டு வர முடியும். இந்த பாரா­ளு­மன்­றத்­தினால் நீண்ட காலம் பய­ணிக்க முடி­யாது. நிரந்­த­மான அர­சாங்­க­மொன்றை நிறு­வு­வ­தற்கு புதிய பாரா­ளு­மன்றம் உரு­வாக்­கப்­பட வேண்டும்.

அது மாத்­தி­ர­மின்றி பாரா­ளு­மன்றம் கலைப்­ப­தி­னூ­டாக எதிர்க்­கட்­சியின் திருட்­டுத்­த­ன­மான செயற்­பா­டுகள் முடி­வுக்கு வரும். அத்­தோடு தேர்­த­லி­னூ­டாக மக்களின் ஆணை யார் பக்கம் உள்ளது என்பதும் தெரியவரும். அதன் பின்னர் எதிர்க்கட்சிகளில் வீண் விளையாட்டுக்கள் முடிவுக்கு வரும். எனவே அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றும் என்றார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *