Breaking
Fri. May 17th, 2024

எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான பிர­சார செயற்­பா­டுகள் யாவும் எதிர்­வரும் வெள்ளிக்­கி­ழமை நள்­ளி­ரவு 12 மணி­யுடன் நிறை­வ­டை­ய­வுள்ள நிலையில் அர­சியல் கட்­சி­க­ளி­னதும் வேட்­பா­ளர்­க­ளி­னதும் இறுதிக் கட்ட பிர­சா­ரங்கள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் இறுதிப் பிர­சாரக் கூட்டம் குரு­ணாகல் மாவட்­டத்­திலும் ஐக்­கிய தேசிய கட்­சியின் இறுதி பிர­சாரக் கூட்டம் கொழும்பு மரு­தா­னை­யிலும் நடை­பெ­ற­வுள்­ளன.

அத்­துடன் மக்கள் விடு­தலை முன்­னணி, ஜன­நா­யகக் கட்சி, தமிழர் விடு­தலை கூட்­டணி, இலங்கை தொழி­லாளர் காங்கிரஸ், தமிழ் முற்­போக்கு முன்­னணி உள்­ளிட்ட கட்­சி­களும் தமது இறுதிக் கட்ட பிர­சார பணி­களை தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் இறுதிக் கட்ட பிர­சாரப் பணி­களை முன்­னெ­டுத்­துள்­ளது. அத்­துடன் சுயேச்சைக் குழுக்­களும் பிர­சாரப் பணி­களை நாட­ளா­விய ரீதியில் மேற்­கொண்­டு ­வ­ரு­கின்­றன.

குரு­ணா­கலில் நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் இறுதிப் பிர­சாரக் கூட்­ட­மா­னது அதன் வேட்­பாளர் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் நடை­பெ­ற­வுள்­ளது. கொழும்பில் நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய தேசிய கட்­சியின் தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­ர­ம­சிங்க கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்ளார்.

இது இவ்­வாறு இருக்க பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான ஏற்­பா­டுகள் பூர்த்தி செய்­யப்­பட்­டு­வ­ரு­கின்ற நிலையில் கடந்த சனிக்­கி­ழமை வரை இது­வரை 8.2 மில்­லியன் வாக்­காளர் அட்­டைகள் வாக்­கா­ளர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழ­மையும் விசேட விநி­யோக தின­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு வாக்­காளர் அட்­டைகள் விநி­யோ­கிக்­கப்­பட்­டன.

இன்று 10 ஆம் திக­திக்கு முன்னர் அனைத்து வாக்குச் சீட்­டுக்­களும் விநி­யோ­கித்து முடிக்­கப்­ப­ட­வுள்­ளன. காரணம் தேர்தல் வாக்­க­ளிப்­புக்கு ஒரு வாரத்­துக்கு முன்னர் வாக்­கா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளிப்பு அட்­டை­களை விநி­யோ­கித்­து­ வி­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

எனினும் வாக்­காளர் அட்டை கிடைக்­கா­த­வர்கள் அருகில் உள்ள தபால், உப தபால் நிலை­யங்­க­ளுக்குச் சென்று ஆள் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்தி வாக்­காளர் அட்­டையை பெற்றுக் கொள்­ளலாம்.

எதிர்­வரும் 17 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் நாடு முழு­வதும் மொத்­த­மாக ஒரு கோடியே 50 இலட்­சத்து 44490 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர்.

அத்­துடன் நாடு முழு­வதும் 12021 வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் தேர்­த­லா­னது 2014 ஆம் ஆண்டு வாக்­காளர் இடாப்பின் பிர­காரம் நடை­பெ­ற­வுள்­ளது.

17 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­தேர்­தலில் 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்ள நிலையில் அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேச்­சைக்­கு­ழுக்கள் சார்­பாக 6151 வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

மேலும் தேர்தல் செயற்­பா­டு­க­ளுக்­காக சுமார் இரண்டு இலட்சம் அரச ஊழி­யர்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். வாக்­க­ளிப்பு நட­வ­டிக்­கை­களில் 125000 அரச ஊழி­யர்­களும் வாக்கு எண்ணும் செயற்­பா­டு­களில் 75000 அரச ஊழி­யர்­களும் ஈடுபடவுள்ளனர்.

அத்துடன் பாதுகாப்பு கடமை யில் சுமார் 25000 பொலிஸார் ஈடுபடவுள்ளனர். ஒரு வாக்களிப்பு நிலையத்துக்கு இரண்டு பொலிஸ் அதிகாரிகள் வீதம் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.

அத்துடன் நடமாடும் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *