Breaking
Mon. May 6th, 2024

எம்.ரீ.எம்.பாரிஸ்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 11.04.2015ம் திகதி சனிக்கிழமை ஏறாவூர் ஆயிஷாபள்ளிவாசலில் பெண்கள் ஆன்கள் இரு சாராருக்கும் விஷேட பயான் நிகழ்சி  ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

 இம் மார்க்க சொற்பொழிவு நிகழ்வில் இலங்கையின் பிரபல  மார்க்க சொற்பொழிவாளர்  அஷ்ஷெய்க் எஸ்.எம்.அப்துல் ஹமீட் (ஷரயீ) கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

இரு அமர்வுகளாக நடை பெறும் இந்நிகழ்ச்சியானது பெண்களுக்கு 4.15 மணிதொடக்கம் 5.45 மணி வரை நடை பெறும் நிகழ்வில் ” மன நிம்மதியைஇழக்கச்செய்யும் ஆடம்பர வாழ்வு” எனும் தலைப்பில் பெண்களுக்கும்

மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து  இரவு 8.30 மணி வரை நடை பெறும் நிகழ்வில் ”சமூக சீர்கேடுகளும் அதற்கான தீர்வும்” எனும் தலைப்பில் ஆண்களுக்கும் இடம் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக  ஏறாவூர் தௌஹீத் ஜமாஆத்தின் தலைவா் தலைவர் எஸ்.அப்துல் ஹமீட்  தெரிவித்தார்.

இவ் பயான் நிகழ்வுகளில்  அணைத்து சகோதர சகோதரிகளையும் கலந்து பயன் பெறுமாறு பொது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன்  இந்நிகழ்வு பற்றிய தகவல்களை முடியுமானவரை ஏனைய இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு தெரிவிக்குமாறு ஜமாஆத்தின் தலைவா் மேலும் கேட்டுக்கொண்டார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *