Breaking
Sat. May 4th, 2024

ஐக்­கிய தேசியக் கட்­சியின் 69 ஆவது நிறை­வாண்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைமையகமான சிறி­கொத்­தாவில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்த நிகழ்­விற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தம அதி­தி­யாக வருகை தர­வுள்ளார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­மசிங்க தலை­மையில் இந்த நிறை­வாண்டு விழா காலை 9 மணிக்கு ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.
ஐக்­கிய தேசிய கட்சி இலங்­கையின் முத­லா­வது பிர­தம மந்­திரி டி.எஸ் சேனா­நா­யக்­க­வினால் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

இதன்­போது எஸ்.டப்­ளியு.ஆர்.டி பண்­டா­ர­நா­யக்­கவும் அதே­கட்­சி­யி­லேயே இருந்தார். எனினும் 1951 ஆம் ஆண்டு எஸ்.டப்­ளியு.ஆர்.டி பண்­டா­ர­நா­யக்­க­வினால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆரம்­பிக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் 64 ஆண்­டு­க­ளுக்கு பிறகு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ரொ­ருவர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் நிறை­வாண்டு விழா­வில் கலந்துகொள்­ள­வுள்ளார்.

இந்த நிறை­வாண்டு விழா­வில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சஜித் பிரே­ம­தாஸ, ரவி கரு­ணா­நா­யக்க, ஜோன் அம­ர­துங்க, கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் கபீர் ஹாஷிம், ஹரீன் பெர்னாண்டோ உள்­ளிட்டோர் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *