Breaking
Mon. Apr 29th, 2024
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்தே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டும் இதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,தமிழ் தேசிய கூட்டமைப்பு,மலையக கட்சி என்பன உறுதுனையாக உள்ளது எங்களுக்குள் எவ்வித பிரிவினையும் கிடையாது என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க,அமைச்சர் கபீர் காசிம் நேற்று (24) மூதூரில் கலந்து கொண்டு காபட் வீதி ஆரம்பித்து வைப்பதற்கான ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்
எதிர்வரும் தேர்தல்கள் சிறுபான்மை சமூகம் தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்க வேண்டும் .
ஜனாதிபதித் தேர்தல்,பாராளுமன்ற தேர்தல் என்பவற்றை சிறுபான்மை வாக்குகள் மூலமே அரசாங்கத்துக்கு சரியான முடிவுகளை வழங்குகிறது.
முப்பது வருட கால யுத்தம் காரணமாக திருகோணமலை மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது பல்வேறு அபிவிருத்திகளை செய்ய வேண்டியுள்ளது துரித அபிவிருத்தியில் ஐந்து மாவட்டங்களில் திருகோணமலையும் உள்வாங்கப்பட்டுள்ளது இதில் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் கபீர் காசிமுக்கு ஒரு பொறுப்பு உள்ளது இங்கு 101 தாங்கிகள் பயன்படுத்தப்படாமை வெறுமையாக உள்ளது இந்த பெற்றோலிய வளத்துறை அமைச்சுக்கு சொந்தமான தாங்கிகளை பயன்படுத்தினால் மேலும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நன்மையடைவார்கள் யுத்தத்தை காரணம் காட்டி அன்று கைவிடப்பட்ட நிலையில் உள்ளது இவ்வாறு சபுகஸ்ஹந்த போன்று பாரியதொரு முன்னெடுப்புக்களை கொண்டு செயற்படுவதாக இருந்தால் இங்குள்ள இளையோர் சமுதாயமும் நன்மையடைவார்கள் இவ்வாறான திட்டங்கள் பிரதம மந்திரியின் திட்டத்தில் உள்ளது ஐக்கிய தேசிய முன்னனி என்ற ஒரே அரசாக பிரதமருடைய அரசு இங்கு காணப்படுகிறது இதனை எமது சிறுபான்மை சமூகம் ஏற்றுள்ளது தொடர்ச்சியாக சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பு உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் இதற்காக சிறுபான்மை கட்சிகள் ஓரணியில் நின்று செயற்படுவதற்கு வருகின்ற தேர்தலுக்கு முகங்கொடுக்க தயாராக உள்ளோம்.
மேலும் 2004,2010 ஆண்டளவில் தோப்பூர் பிரதேச செயலகம்,புல்மோட்டை பிரதேச செயலகம்,குறிஞ்சாக்கேணி பிரதேச செயலக  தனித்தனி உருவாக்கம்  பற்றி பேசப்பட்டு அதற்கான தீர்வுகளும் பிரதமரால் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய நிலவரத்தின் படி கல்முனைக்கான தனி பிரதேச செயலகம் எப்போது உருவாக்கப்படுகிறதோ தோப்பூரும் தனிப்பிரதேச செயலகமாக உருவாக்கப்படும் இதனை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிரவிடம் ஒப்படைத்துள்ளார்.
வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் நாம் சிறுபான்மை சமூகத்தை பாதுகாத்து அரவனைக்ககக் கூடிய எமது இருப்பை உறுதிபடுத்தக்கூடியவர்களுக்கு பின்னால்தான் நிற்க வேண்டும் இதற்காக அமைச்சர் றிசாத் பதியுதீன் கிண்ணியாவில் அண்மையில் பங்கேற்ற மாபெரும கூட்டத்தில் உள்ள சனநெருக்கம் இந்த நாட்டினுடைய ஜனாதிபதி பிரதமர் மற்றும் மஹிந்த ராஜபக்ச போன்றோர்களுக்கு காட்டுவதற்காகவே கூட்டம் இடம் பெற்றது.
 முஸ்லிம்கள் யார் பின்னால் நிற்கிறார்கள் தேர்தலிலும் யார் பின்னால் நிற்பார்கள் என்பதை இதில் இருந்து  உணர்ந்து கொள்ள முடியும் . இனவாதங்களை கக்கி வாக்குகளை தேட முயற்சிப்பது தோல்வியில் முடிவடையும் மஹிந்த அரசாங்கம் யுத்தத்தை வெற்றி கொண்ட போதும் ஏன் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்  என்பதை இந்த நாட்டில் இனவாதத்துக்கு இடமில்லை என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறது.
இனவாதத்தை விதைத்ததால்தான் இதற்கான தகுந்த பாடத்தை மக்கள் அதாவது முஸ்லிம் சமூகம் கற்றுக் கொடுத்துள்ளது .
நாட்டில் நடை பெறுகின்ற ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்ற தேர்தல்களை சிறுபான்மை சமூகமே தீர்மானிக்கும் .அமைச்சர் றிசாத் கை  நீட்டுகின்ற வேட்பாளருக்கே இம் முறை ஆதரவு வழங்கப்படும் . முஸ்லிம்களுக்கான பிரச்சினைகள் சோதனைகள் எங்கு இடம் பெற்றாலும் அதற்காக நானும் எமது தலைமையின் குரலும் உயர்த்தப்படும்.
இதற்காக நாம் அனைவரும் ஓரனியில் நின்று ஒருமித்து செயற்பட வேண்டும் .மொட்டு,கதிரை என்ற கட்சி பாகுபாடின்றி உரிமைகளுக்காக நிம்மதியாக மாவட்ட, தேசிய உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்காக செயற்பட வேண்டும் .
முஸ்லிம் சமூகம் பல சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது இதனை வெற்றி கொள்ள வருகின்ற தேர்தல் நிலையான இருப்பை உறுதிப்படுத்தும் தேர்தலாக அமைய நாம் அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை இதற்காக ஒன்றாக கூட்டினைந்து செயற்படுவோம் என்றார்.

Related Post