Breaking
Sun. May 19th, 2024

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். இயக்கத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இணைந்து வருகிறார்கள்.

குறிப்பாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் மட்டும் 600-க்கும் மேற்பட்டவர்கள் இந்த இயக்கத்தில் இணைந்து உள்ளதாக அந்நாட்டு உள்துறை தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த 9 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சிரியா சென்று ஐ.எஸ். நடத்தும் ஆஸ்பத்திரிகளில் பணிபுரிந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 20 வயதுக்கு உட்பட்ட இந்த மாணவர்களில் 4 பேர் பெண்கள். இதனை அறிந்த மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த தகவலை இங்கிலாந்து நாட்டு பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *