Breaking
Mon. Apr 29th, 2024

கெசினோ விளையாட்டில் உள்ளுர்வாசிகள் பங்கேற்பது தடைசெய்யப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கெசினோ சூது விளையாட்டுக்களில் வெளிநாட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கெசினோ காரணமாக இலங்கையில் பாரிய கலாசார சீரழிவுகள் ஏற்பட்டுள்ளமையை பல்வேறு மதக்குருமாரும் சுட்டிக்காட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *