Breaking
Fri. May 17th, 2024
உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டு எதிர்­வரும் 31ஆம் திகதி இலங்கை வர­வுள்ள ஐக்­கிய நாடு­களின் செய­லாளர் நாயகம் பான் கி மூன் கொழும்பில் தங்­கி­யி­ருக்கும் போது இலங்கை முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை அவ­ரது கவ­னத்­திற்குக் கொண்­டு­வரும் வகை­யி­லான அமைதிப் பேர­ணி­யொன்று ஐ.நா.காரி­யா­ல­யத்தின் முன்பாக நடாத்­தப்­ப­ட­வுள்­ளது.
வடக்கு விஜயம் மேற்­கொண்டு தமி­ழர்­களின் பிரச்­சி­னை­களைக் கேட்­ட­றி­வது போன்று கிழக்­கிற்கும் ஐ.நா. செய­லாளர் நாயகம் விஜயம் செய்து முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளையும் கேட்­ட­றிய வேண்டும் என அமை­திப்­பே­ர­ணியில் வலி­ய­றுத்­தப்­ப­ட­வுள்­ளது.
ஐ.நா. செய­லாளர் நாய­கத்தை கிழக்­கிற்கும் அழைத்துச் செல்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் மேற்­கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்­கப்­ப­ட­வுள்­ளது.
முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம், வட,கிழக்கில் முஸ்­லிம்­களின் காணிப் பிரச்­சினை, பள்­ளி­வா­சல்­க­ளுக்­கெ­தி­ரான பிரச்­சி­னைகள், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வெறுப்­பு­ணர்­வை­யூட்டும் பேச்­சுக்கள், ‘சிங்­ஹலே’ அமைப்­பினர் ½ மணித்­தி­யா­ல­யத்­துக்குள் முஸ்­லிம்­களை அழித்­து­வி­டுமோம் என்ற அச்­சு­றுத்­தல்கள், சவூதி சுனாமி வீட்டுத்திட்டம் என்­பன தொடர்­பான விப­ரங்கள் அடங்­கிய மக­ஜ­ரொன்றும் ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாய­கத்­திடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.
ஐக்­கிய சமா­தான முன்­னணி இதற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கி­றது. அமைதிப் பேர­ணியில் முஸ்­லிம்கள் பெரு­ம­ளவில் கலந்­து­கொண்டு கவ­ன­யீர்ப்­பினை வெளி­யிட வேண்­டு­மென ஐக்­கிய சமா­தான முன்­ன­ணியின் தலைவர் ஐ.என்.எம்.மிப்லால் தெரி­வித்தார்.
எதிர்­வரும் 31ஆம் திகதி இலங்கை வர­வுள்ள ஐக்­கிய நாடு­களின் செய­லாளர் நாயகம் பான் கி மூன் முதலாம், இரண்டாம் திக­தி­களில் இலங்­கையில் தங்­கி­யி­ருந்து சந்­திப்­பு­களில் கலந்து கொள்­ள­வுள்ளார்.
ஐ.நா. செய­லாளர் நாயகம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய, தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள் மற்றும் சிவில் சமூக பிர­தி­நி­திகள், வடக்கு ஆளுநர் ரெஜி­னோல்ட்­குரே வடக்கு முதலமைச்சர் விக்னேஷ்வரன் ஆகி­யோரைச் சந்­தித்து செப்­டெம்பர் 2 ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்து சந்­திப்­பு­களில் கலந்­து­கொள்­ள­வுள்­ள­துடன் நிலை­மை­க­ளையும் பார்­வை­யி­ட­வுள்ளார். கொழும்பு லக் ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் நிரந்தரமான சமாதானம் தொடர்பில் உரையாற்றவுள்ளார்.
பான் கி மூன் முஸ்லிம் தரப்­பு­களைச் சந்­திப்­பது தொடர்பில் இது­வரை உத்­தி­யோ­க­பூர்­வ­மான அறி­வித்­தல்கள் எதுவும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *